கோயம்புத்தூர் ஸ்டைலில் ஊரே மணக்க கூடிய அளவிற்கு எப்படி ஒரு குழம்பு செய்வது என்று பார்ப்போம். செஃப் தீனா ஸ்டைலில் இட்லி, தோசைக்கு ஏற்ற ஒரு தக்காளி குழம்பு அதுவும் நான்வெஜ் ஸ்டைலில் எப்படி செய்வது என்று அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
கடலை எண்ணெய் வெங்காயம் காய்ந்த மிளகாய் கருவேப்பிலை கடுகு தக்காளி சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி சோம்பு பட்டை கிராம்பு மிளகு சீரகம் கொத்தமல்லி தூள் மஞ்சள் தூள் கடலை பருப்பு உப்பு தேங்காய் கொத்தமல்லி இலை
செய்முறை:
Advertisment
Advertisements
சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை கடலை எண்ணெயில் வறுக்கவும். நறுக்கிய தக்காளி சேர்க்கவும். தேங்காய், கொத்தமல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். வறுத்த பொருட்கள் ஆறியதும், அம்மியில் போட்டு அரைக்கவும்.
கடலை எண்ணெயில் கடுகு, சீரகம், மிளகு, பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அரைத்த மசாலாவை சேர்த்து தண்ணீர் சேர்க்கவும். உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும். இந்த தக்காளி குழம்பை தோசையுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.