சாதாரணமாக நினைக்கும் பல களைச் செடிகள், உண்மையில் சக்திவாய்ந்த மூலிகைகள் ஆகும். இதை வைத்து சளி சரிசெய்ய உதவும் ஒரு மூலிகை சூப் எப்படி செய்வது என்று மட்பாட்மினி இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
இந்த ரசத்தில் சேர்க்கப்படும் முக்கிய மூலிகைகள் இவை: மொசுமொசு தலை, முடக்கத்தான், கோவை கொழுந்து, வாதநாராயணன் கொழுந்து, முருங்கை கொழுந்து, நாயுருவி, சங்கு கொழுந்து, புண்ணாக்கு பூடு, கொழிஞ்சி, நெருஞ்சி முள், பிரண்டை, தூதுவளை, வரக்கொத்தமல்லி. இவற்றுடன், கொள்ளு, சீரகம், மிளகு ஆகியவையும் சேர்க்கப்படுகின்றன.
தயாரிக்கும் முறை:
முதலில், மேலே குறிப்பிட்ட மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை சிறிதளவு எண்ணெய் ஊற்றி வதக்கிக் கொள்ள வேண்டும். வதக்கிய கலவையை அம்மியில் வைத்து நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்ததும், அரைத்து வைத்த மூலிகை கலவையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். ரசத்திற்குத் தேவையான அளவு புளி மற்றும் தக்காளியை கரைத்து, வதக்கிய கலவையுடன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடலாம்.
இந்த ரசத்தை சூப் போல தனியாகவோ அல்லது சாதத்துடன் கலந்தோ சாப்பிடலாம். வயல்களிலும், சாலையோரங்களிலும் நாம் சாதாரணமாகப் பார்க்கும் இந்தச் செடிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.