சமையலில் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட அதன் சுவையையும் தனித்துவமான டிஸ்களையும் கொடுக்கும். எப்போதும் போல் அல்லாமல் சமையலில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்தால் சுவை நன்றாக இருக்கும். அப்படியாக சில டிப்ஸ்களை மற்றும் பார்ப்போம்.
டிப்ஸ் 1: ஸ்டஃப்டு சப்பாத்தி செய்யும்போது, வழக்கமான உருளைக்கிழங்கு மசாலாவுடன் சில மாற்றங்களைச் செய்யலாம். வேகவைத்த உருளைக்கிழங்குடன் துருவிய பனீர், துருவிய காய்கறிகள், வதக்கிய வெந்தயக்கீரை (மேத்தி) அல்லது வதக்கிய பாலக்கீரை (பாலக்) சேர்த்து கலந்து சப்பாத்தியில் வைத்தால், சுவையுடன் சத்தும் அதிகரிக்கும்.
டிப்ஸ் 2: சிப்ஸ் அல்லது பொரியலுக்கு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்க்கும்போது, அவற்றை தனித்தனியாக தூவுவதற்குப் பதிலாக, இரண்டையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு, பின்னர் உணவு மீது தூவலாம். இப்படிச் செய்யும்போது மசாலா அனைத்து இடங்களிலும் ஒரே சீராக பரவும்.
டிப்ஸ் 3: வெல்லப் பாகு காய்ச்சும்போது, வெல்லத்தை முதலில் வடிகட்டி கழிவுகளை நீக்கிவிடவும். பாகு கொதிக்கும்போது, சுக்குப் பொடி, ஏலக்காய் பொடி, மற்றும் நெய்யில் வறுத்த தேங்காய் துருவல் சேர்த்துக்கொள்ளலாம். பாகு சரியான பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். இந்த பாகு வெந்த இடியாப்பம், புட்டு, அல்லது ஆவியில் வேகவைத்த பாசிப்பயறுடன் கலந்து பரிமாற சுவையாக இருக்கும்.
டிப்ஸ் 4: வழக்கமாக பூரி செய்யப் பயன்படுத்தும் கோதுமை மாவுடன் சிறிது சத்து மாவைச் சேர்த்துப் பிசைந்து பூரி செய்தால் சுவையாக இருக்கும். பூரிக்கு ஸ்டஃபிங் செய்யும்போது, துருவிய நட்ஸ், பேரீச்சம்பழம் துருவல், மற்றும் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்துக்கொள்ளலாம். அல்லது, ஆவியில் வேகவைத்த பாசிப்பயறை சற்று கரகரப்பாக மசித்து, அதனுடன் மல்லித்தூள் மற்றும் பிற மசாலாப் பொருட்களைச் சேர்த்து ஸ்டஃபிங் ஆகப் பயன்படுத்தியும் பூரி பொரிக்கலாம். இது பூரிக்கு ஒரு தனித்துவமான சுவையைக் கொடுக்கும்.
டிப்ஸ் 5: குழந்தைகளுக்கு நெய் தோசை சுடும்போது, தோசை மாவை ஊற்றிய பின், அதன் மேல் கறிவேப்பிலை அல்லது கொத்தமல்லி சட்னியை மெல்லிய அடுக்காகத் தடவிவிடலாம். தோசை நன்கு ரோஸ்ட் ஆனதும் எடுத்தால், குழந்தைகள் சட்னியுடன் சேர்த்து 'க்ரீன் தோசை'யை விரும்பி சாப்பிடுவார்கள்.
டிப்ஸ் 6: எலுமிச்சை சாதம் செய்யும்போது, சாதம் தயாரானதும், எலுமிச்சை சாற்றை நேரடியாக சாதத்தில் கலந்து கிளறவும். பின்னர், வறுத்த முந்திரிப் பருப்பு மற்றும் வறுத்த வெந்தயப் பொடியைத் தூவி, தாளிப்பை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும். இது எலுமிச்சை சாதத்திற்கு ஒரு சிறப்பான சுவையைக் கொடுக்கும்.