/indian-express-tamil/media/media_files/2024/12/19/0QBlSmeBe3YePRrvwMkd.jpg)
கொத்தமல்லி தொக்கு
தினசரி என்ன சமைக்க வேண்டும் என்பதே பலருக்கும் போராட்டமாக இருக்கும். மூன்று வேளையும்ம் குழம்பு செய்வதில் தான் அனைவருக்கும் இங்கு சிக்கல். அதிலும் பேச்சுலர்ஸ் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அப்படி தினம் தினம் என்ன சமைக்க வேண்டும் என யோசிப்பவர்களா நீங்கள் இனி அந்த கவலை வேண்டாம்.
சப்பாத்தி, இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் ஏற்றவாறு ஒரு கொத்தமல்லி தொக்கு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி புதினாபுளிகரைசல் மிளகாய்தூள் கொத்தமல்லி தூள் வெந்தயம் கடுகு பொடி உப்பு நல்லெண்ணெய் பெருங்காயத்தூள் வெள்ளைப்பூண்டு
செய்முறை
கொத்தமல்லி மற்றும் புதினா எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். இதனை நன்கு கழுவி நறுக்கி எடுத்துக் கொள்ளவும். சிறிது தண்ணீர் கூட இல்லாதவாறு தண்ணீரை வடித்து ஒரு வெள்ளைத்துணியில் சிறிது நேரம் காய வைக்கவும்.
தண்ணீர் இருந்தால் கெட்டுப் போய்விடும் எனவே தண்ணீர் இல்லாமல் இருக்க விடும் வேண்டும். எப்போதும் போல புளிக்கரைசலும் எடுத்துக் கொள்ளவும். புளிக்கரைசல் தண்ணியாக இருக்கக் கூடாது.கெட்டியாக இருக்க வேண்டும்.
புளிகரைசலில் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், வெந்தயம் கடுகு பொடி, உப்பு இவை அனைத்தையும் கலந்து கொள்ளவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் புதினா, கொத்தமல்லியை சேர்த்து மீடியம் சூட்டில் வதக்க வேண்டும். இலை சுருண்டு நன்றாக வதங்கியதும் அதை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும் வாசனைக்கு பெருங்காயத்தூள், நசுக்கிய வெள்ளைப் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கியதும் புளி கரைசலுடன் சேர்த்த மசாலாக்கள் என அனைத்தையும் எண்ணெயில் போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கி வரும் போது அதன் பச்சை வாசம் போய்விடும். எனவே இது எண்ணெயில் நன்றாக வதங்க வேண்டும். கலந்துவிட பச்சை வாசம் நீங்கி எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் இருக்கும்போது அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி, புதினா விழுதுகளை சேர்த்து கலந்து விடவும்.
மிதமான சூட்டிலேயே ஒரு 15 நிமிடம் நன்றாக கலந்துவிட வேண்டும் பின்னர் அதன் நிறம் மாறி ஓரத்தில் எண்ணெய் பிரிந்து வரும். பின்னர் இதை ஆறவைத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம்.
கெட்டுப் போகாது தண்ணீர் மற்றும் கைப்படாமல் இதனை பயன்படுத்த வேண்டும். இதை சுடு சாப்பாட்டிற்கு, சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.