சளி, இருமலுக்கு சூப்பர் மருந்து: ஒரு மணி நேரம் சுடு நீரில் ஊற வைத்து குடித்தால் போதும்: டாக்டர் கார்த்திகேயன்

சளி, இருமல் உடனே குணமாக சித்தரத்தை இப்படி எடுத்துக் கொள்ளுங்கள் டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.

சளி, இருமல் உடனே குணமாக சித்தரத்தை இப்படி எடுத்துக் கொள்ளுங்கள் டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
sidthara

சளி, இருமல் மற்றும் பிற நாட்டு வைத்தியத்திற்கு நாம் இஞ்சி பயன்படுத்துவது போல் இந்தோனேசியா, தாய்லாந்து, வியாட்நாம் நாடுகளில் இதை எடுத்துக் கொள்வர். அதாவது இஞ்சி குடும்பத்தை சேர்ந்த சித்தரத்தை. அங்குள்ளவர்கள் சமையலிலும் இதை எடுத்துக் கொள்வர். இப்போது குளிர், பனிக்காலமாக உள்ளது. பலருக்கும் சளி, இருமல் சொந்தரவு ஏற்படுகிறது. அதற்கு இது அருமருந்தாக இருக்கும். 

Advertisment

முதலில் சுடு நீர் தனியாக எடுத்துக் கொள்ளவும். அதில் சித்தரத்தை போட்டு ஊறவிட்டு ஒரு மணி நேரத்திற்கு பின் எடுத்து குடிக்கலாம். கொஞ்சமாக காரத் தன்மை இருக்கும். சுவையாக இருக்கும். மழைக்காலத்தில் காலை, மாலை ஒரு டம்ளர் குடிக்கலாம். நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கு. குழந்தைகள் இதை குடிக்க மாட்டார்கள் என்றால் சித்தரத்தையை அரைத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். இதில் கொஞ்சமாக எடுத்து தேன் கலந்து கொடுக்கலாம். 

சித்தரத்தை, பேரரத்தை என 2 உள்ளது. தமிழகத்தில் சித்தரத்தை பயன்படுத்தப்படுகிறது. வடஇந்தியாவில் பேரரத்தை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சித்தரத்தை சளி, இருமலுக்கு மட்டுமல்லாது மாரடைப்பு முதல் புற்றுநோய் வரை அதை எதிர்த்து நம்மை பாதுகாக்க கூடியது. அவ்வளவு நன்மைகள் உள்ளன என  டாக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளார். 

Advertisment
Advertisements

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: