/tamil-ie/media/media_files/uploads/2022/08/download-14-1.jpg)
சமலையலில் முக்கியமானதே சில விஷயங்களை நாம் தெரிந்து வைத்துகொள்வதுதான். சிறிய தகவல்கள் கூட சமையலில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். இந்நிலையில் இந்த சமையல் டிப்ஸ் மூலம் உங்கள் சமயல் தரத்தை உயர்த்துங்கள்.
பருப்பு பொடி செய்யும் பொழுது துவரம் பருப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக உடைத்த கடலையுடன் காய்ந்த மிளகாய், பூண்டு மற்றும் தேங்காய் சேர்த்து அரையுங்கள் ருசி அருமையாக இருக்கும் . கொப்பரை தேங்காயாக இருந்தால் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.
தக்காளியை பயன்படுத்தி குருமா வைக்கும் பொழுது கொஞ்சம் வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு பச்சையாக அரைத்து சேர்த்து குருமா வைத்து பாருங்கள் சுவை அள்ளும்.
கலவை சாதங்கள் தயாரிக்கும் பொழுது உதிரி உதிரியாக வடித்த சாதத்தை பெரிய தாம்பாலத்தில் கொட்டி ஆற வைக்க வேண்டும். பின்னர் ரெண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சாதத்தை கிளறி பாருங்கள். உதிரி உதிரியாக எவ்வளவு நேரம் ஆனாலும் அதன் தன்மை மாறாமல், காய்ந்து போகாமல் அப்படியே சுவையாக இருக்கும்.
இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது பொதுவாக அவல் சேர்த்து அரைப்பார்கள். அவல் சேர்த்தால் மிருதுவான இட்லி வரும். அதே போல சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து அரைத்து பாருங்கள் தோசை மொறு மொறு என்று கிரிஸ்பியாக வரும். இட்லியும் வெள்ளை வெளேரென மல்லிகை பூ போல மணக்கும்.
சப்பாத்தி அல்லது பூரிக்கு மாவு பிசையும் போது வெதுவெதுப்பான தண்ணீரும், எண்ணெயும் சேர்த்து பிசைவது உண்டு. ஆனால் அதற்கு பதிலாக வெதுவெதுப்பாக இருக்கும் பாலை ஒரு கப் அளவிற்கு சேர்த்து இதே போல பிசைந்து பாருங்கள், சாஃப்டான பூரி மற்றும் சப்பாத்தி கிடைக்கும். ருசியும் சூப்பராக இருக்கும்.
மிளகாய் வறுக்கும் பொழுது காம்பை நீக்கிவிட்டு வறுக்க கூடாது, காம்புடன் லேசாக வறுத்து எடுத்து ஆற வைத்து, பின்னர் காம்பை நீக்கிவிடலாம். மிளகாய் நெடி எடுக்காமல் இருக்க வறுக்கும் பொழுது கொஞ்சம் தூள் உப்பை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us