பரோட்டா பலருக்கும் பிடிக்கும். கடைகளில் வாங்கி சாப்பிடுவோம். பரோட்டா உடன் சிக்கன், மட்டன் சால்னா சேர்த்து சாப்பிடுவது ருசி அள்ளும். முட்டை பரோட்டா, வீச்சு பரோட்டா, சில்லி பரோட்டா என பல வகைகள் உள்ளன. இதில் ஒன்று மொறு மொறு பொரிச்ச பரோட்டா. எண்ணெய்யில் செய்து எடுக்கும் பரோட்டா. இந்த பரோட்டா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மைதா- 3 கப்
சர்க்கரை -1/4 கப
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர்-தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கவும். அதில் தண்ணீர் ஊற்றி பிசைந்துக் கொள்ள வேண்டும். பின் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து மாவினை நன்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு ஈரத் துணியை பிசைந்த மாவின் மேல் போட்டு சுமார் 4 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பின் 4 மணி நேரம் கழித்து மாவினை மீண்டும் ஒரு முறை பிசையவும். சிறிது எண்ணெய் விட்டு சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
மீண்டும் எண்ணெய் விட்டு பரோட்டாவிற்கு வட்டமாக மடிப்பது போல் மடித்துவிட வேண்டும். அடுத்ததாக பரோட்டா மாவு அளவிற்கு தட்டையாக செய்யவும். இப்போது, அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை காய வைக்கவும். எண்ணெய் காய்ந்தவுடன் மிதமான தீயில் தேய்த்த பரோட்டாக்களை ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும். ஒரு புறம் சிவந்து வந்தவுடன் மறுபுறம் திருப்பி போட்டு பொரித்து எடுத்து எண்ணெய்யை வடிகட்டி எடுக்கவும். அவ்வளவு தான் சூடான சுவையான பொரிச்ச பரோட்டா ரெடி!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/