மொறு மொறு சேமியா பக்கோடா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சேமியா – அரை கப்
கடலைமாவு – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 5,
சோம்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் -தேவைக்கு ஏற்ப
செய்முறை
முதலில் அடுப்பில் கடாய் வைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து சேமியாவை வேக வைத்து வடியுங்கள். அடுத்து ஒரு பாத்திரம் எடுத்து அதில் கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, சோம்பு, உப்பு சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசையவும். அவ்வளவு தான்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சேமியா கலவையில் சிறிது எண்ணெய் சேர்த்து பிசைந்து அந்த கலவையை உதிரி உதிரியாக சூடான எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும். அவ்வளவு தான் மொறு மொறு சேமியா பக்கோடா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“