ஈவினிங் ஸ்நாக்ஸ்: மொறு மொறு 'கீரை தட்டை'... இப்படி சுட்டால் கணக்கில்லாமல் சாப்பிடுவாங்க!
மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற மொறு மொறுப்பான முருங்கைக் கீரை தட்டை எவ்வாறு செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் விளக்கமாக பார்க்கலாம். இதன் சுவை அனைவருக்கும் பிடிக்கும்.
மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற மொறு மொறுப்பான முருங்கைக் கீரை தட்டை எவ்வாறு செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் விளக்கமாக பார்க்கலாம். இதன் சுவை அனைவருக்கும் பிடிக்கும்.
மாலை நேரம் வந்தாலே டீ அல்லது காபியுடன் சேர்த்து ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அந்த வகையில் சத்தான முருங்கைக் கீரை தட்டையை எவ்வாறு சுவையாக செய்யலாம் என்று காண்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு – 2 கப் (300 கிராம்), உப்பு – தேவையான அளவு, சீரகம் – அரை டீஸ்பூன், வெள்ளை எள் – 1 டீஸ்பூன், பெருங்காயப்பொடி – கால் டீஸ்பூன், மிளகாய் பொடி – அரை டீஸ்பூன், சூடான எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை – சிறிதளவு, மல்லி இலை – சிறிதளவு, முருங்கைக்கீரை – 1 கப், ரவை – 1 டேபிள்ஸ்பூன் மற்றும் சூடான தண்ணீர் – 200 மில்லி
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு, சீரகம், எள், பெருங்காயத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கவும். இதில் சூடான எண்ணெயை சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும். இனி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை மற்றும் முருங்கை கீரை ஆகியவற்றையும் சேர்க்கலாம்.
பின்னர், ஊறவைத்த ரவையை சேர்த்து வெதுவெதுப்பான நீர் கலந்து மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைய வேண்டும். இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு பட்டர் பேப்பர் பயன்படுத்தி, ஒவ்வொரு உருண்டையையும் மெல்லியதாக தேய்க்க வேண்டும். இதையடுத்து, அடுப்பில் எண்ணெய்யை மிதமான சூட்டில் வைத்து, தட்டைகளை பொன்னிறமாக பொறித்து எடுக்கலாம். இவ்வாறு செய்தால் மொறுமொறுப்பான முருங்கைக் கீரை தட்டை தயாராகி விடும்.