சம்மரில் சூடு தாங்கலையா வெறும் தயிர் வைத்து எப்போதும் தயிர் சாதம் தான் செய்கிறீர்களா? அப்போ தயிர் வைத்து சுவையான தயிர் மசாலா கறி செய்து சாப்பிடுங்கள். சுவையான தயிர் மசாலா கறி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
சிறிய உரலில் பூண்டு, காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கொரகொரப்பாக இடித்து கொள்ளவும். தயிரை நன்கு கடைந்து வைத்து கொள்ளவும். பானில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம் வறுக்கவும். பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு, பூண்டு மிளகாய் விழுது சேர்த்து கலந்து விடவும். அடுத்து தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு கடைந்த தயிரை சேர்த்து கலந்து விடவும்.
இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டால் அவ்வளவு தான் சுவையான தயிர் மசாலா கறி தயார்.