/indian-express-tamil/media/media_files/2025/05/31/Q0QZJj2ztxbez7CCOCx0.jpg)
கருவேப்பிலை தொக்கு, சாதம், இட்லி, தோசை எனப் பல உணவு வகைகளுக்கும் சுவையான துணை உணவாக இருக்கும். மேலும், இது ஒரு வாரத்திற்கும் மேல் கெட்டுப்போகாமல் இருக்கும். இந்த தொக்கை எப்படி எளிமையாகத் தயாரிப்பது என்று பார்ப்போம். சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த மாதிரியான ஒரு தொக்குதான் கருவேப்பிலை தொக்கு.
தேவையான பொருட்கள்:
புதிய கருவேப்பிலை - 2 கப் (சுமார் 100 கிராம்)
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8 முதல் 10
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1/4 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கருவேப்பிலையை நன்றாகக் கழுவி, ஈரம் இல்லாமல் உலர வைக்கவும். ஈரப்பதம் இருந்தால் தொக்கு சீக்கிரம் கெட்டுவிடும். ஒரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து, மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும். அதே கடாயில், உலர்ந்த கருவேப்பிலையைச் சேர்த்து, அது மொறுமொறுப்பாகும் வரை வதக்கவும். நிறம் மாறாமல் பார்த்துக்கொள்ளவும்.
பிறகு, வறுத்த பொருட்கள், புளி, பெருங்காயம், மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, கெட்டியான விழுதாக அரைக்கவும். தண்ணீர் அதிகமாக விடக்கூடாது. அடுத்து, அதே கடாயில் மீதமுள்ள நல்லெண்ணெய்யை ஊற்றி சூடாக்கவும். கடுகு சேர்த்து வெடிக்க விடவும்.
கடுகு வெடித்ததும், அரைத்து வைத்திருக்கும் கருவேப்பிலை விழுதைச் சேர்த்து, மிதமான தீயில் நன்கு வதக்கவும். தொக்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை தொடர்ந்து கிளறவும். இதுவே தொக்கு நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க உதவும். எண்ணெய் நன்கு பிரிந்து வந்ததும், அடுப்பை அணைத்து விடவும். இந்த சுவையான கருவேப்பிலை தொக்கை ஒரு சுத்தமான, காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைத்து, ஒரு வாரத்திற்கு மேல் பயன்படுத்தலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், இன்னும் சில நாட்கள் கூடுதல் வரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.