/tamil-ie/media/media_files/uploads/2023/06/New-Project5.jpg)
Food
வடை மோர் குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம். சாப்பாட்டிற்கு ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
மெதுவடை அல்லது பருப்பு வடை - 10
தயிர் - 2 கப்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
ஊறவைத்து அரைக்க தேவையானவை
அரிசி - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1 ஸ்பூன்
மிக்ஸியில் அரைக்க
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிது துண்டு
தாளிக்க
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை
அரிசி, துவரம் பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளி, வெங்காயம், இஞ்சியை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். ஊறவைத்த அரிசி, துவரம் பருப்புடன், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், 2 கப் தண்ணீர், அரைத்த அரிசி விழுது, உப்பு சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும். அடுத்து கடாய்யில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் கொரகொரப்பாக அரைத்த விழுதை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள தயிர் கலவையை ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வடைகளை போடவும். வடைகளை போட்டவுடன் அடுப்பை அணைத்து விடவும். கடைசியாக அதன் மேல் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான வடை மோர் குழம்பு தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.