Advertisment

வெறும் நாலு ஸ்பூன் பருப்பு போதும்... நம்ம ஊரு ருசியில் டிபன் சாம்பார்; ஈஸி டிப்ஸ் பாருங்க!

பருப்பு மட்டும் வைத்து கிராமத்து ஸ்டைலில் டிபன் சாம்பார் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
sada

கிராமத்து ஸ்டைல் சாம்பார்

சாப்பாடு, டிபன் என அனைவருக்கு பிடித்த மாதிரி அளவாக பருப்பு போட்டு சுவியாக சாம்பார் செய்யலாம். வெறும் 4 ஸ்பூன் துவரம் பருப்பை வைத்து கிராமத்து சுவையில் சூப்பரான சுவையான டிபன் சாம்பாரை எப்படி வைப்பது என்று பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு
வெந்தயம்
சீரகம்
கடுகு, உளுந்து
காய்ந்த மிளகாய்
பெரிய வெங்காயம்
சின்ன வெங்காயம்
தக்காளி
சாம்பார் தூள்
மஞ்சள் தூள்
உப்பு
எண்ணெய்
கருவேப்பிலை
கொத்தமல்லி
பெருங்காயத்தூள்

செய்முறை

Advertisment
Advertisement

முதலில் துவரம்பருப்பை சுத்தமாக கழுவி அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயில் அரை ஸ்பூன் வெந்தயத்தை போட்டு வறுக்க வேண்டும்.

வெந்தயம் நிறம் மாறி வாசனை வர ஆரம்பித்ததும் அதில் அரை ஸ்பூன் அளவிற்கு சீரகத்தையும் போட்டு நன்றாக இரண்டையும் வறுத்து எடுக்க வேண்டும். இது ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

துவரம் பருப்பை எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அதில் ஒரு பெரிய வெங்காயம்,  தக்காளி, பருப்பு ஊற வைத்த தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி நைசாக அரைக்கவும். 

துவரம் பருப்பை அரைத்த பிறகு அதில் மேற்கொண்டு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் இவற்றை போட்டு வதக்கவும். 

சின்ன வெங்காயம் நிறம் மாறிய பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஒரு தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள் தூள், சாம்பார் தூள் சேர்த்து பச்சை வாசம் நீங்கும் வரை வதக்க வேண்டும்.

பிறகு அரைத்து வைத்திருக்கும் இந்த துவரம் பருப்பை அதில் ஊற்றி நன்றாக கலந்து மேற்கொண்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விடவும். கொதிக்கும்போது கெட்டியாகும் என்பதால் மேற்கொண்டு இரண்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பையும் சேர்த்து குறைந்த தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். 

அவ்வப்பொழுது கிளறி விட வேண்டும். இது நன்றாக கொதித்து துவரம் பருப்பின் பச்சை வாசம் நீங்கியதும் வெந்தயம் சீரகம் பொடியை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்.

சாம்பார் வாசம் வர ஆரம்பிக்கும் பக்குவத்தில் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை தூவி நன்றாக கலந்து அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cooking Tips Sambar Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment