நாம் சர்க்கரை நோய் கட்டுபடுத்த வீட்டில் இந்த இரண்டு ரெசிபியை செய்து பார்க்கலாம். இது சுவையாகவும் இருக்கும் உடலுக்கும் நல்லது.
ஓட்ஸ், பருப்பு கிச்சடி
தேவையனா பொருட்கள்
ஓட்ஸ், பாசி பருப்பு, சீரகம், மஞ்சள் பொடி, காய்ந்த மிளகாய், வெங்காயம்-தக்காளி நறுக்கியது. கேரட் நறுக்கியது, பச்சை பட்டாணி, இஞ்சி, உப்பு, எண்ணெய், தண்ணீர் , மஞ்சள் பொடி, மிளகாய் தூள்.
செய்முறை
குக்கரில் எண்ணெய் உற்றி, அதில் கடுகு உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, இஞ்சி, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். தொடர்ந்து அதில் வெங்காயம், கேரட் போட்டு வதக்க வேண்டும். தொடர்ந்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கியதும். தக்களி சேர்த்து வதக்கவும். மசாலா நன்றாக கலந்ததும். ஓட்ஸ் சேர்த்து தண்ணீர் சேர்த்து 8 நிமிடங்கள் வரை குக்கரில் வேக வைக்க வேண்டும்.
பாசிப் பயிறு- கிரீன் பீஸ் கிச்சடி
தேவையான பொருட்கள் : பாசிப் பயிறு நன்றாக ஊற வைத்து கழுவியது. கிரீன் பீஸ், எண்ணெய், வெங்காயம்- தக்காளி நறுக்கியது. இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சீரகம், உப்பு, பெருங்காயம்.
செய்முறை
முதலில் குக்கரில் பச்சை பயறு, கிரீன் பீஸ் சேர்த்து வேகவைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகம், பச்சை மிளகாய் வெங்காயம் ஆகியவற்றை நாம் சேர்க்க வேண்டும். தொடர்ந்து இஞ்சி – பூண்டு விழுது, சேர்த்து கலக்கவும். தொடர்ந்து தக்காளி நறுக்கியது சிறிது உப்பு சேர்க்கவும். நன்றாக வதங்கியதும். வேக வைத்த பாசிப் பயிறு, கிரீன் பீஸ் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.