சர்க்கரை நோய் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு குறைபாடு. ஒரு முறை வந்துவிட்டால் சர்க்கைரை நோயிலிருந்து குணமடைவது நடக்கதாக ஒன்றாகவே இருக்கிறது. வாழியல் மாற்றம் என்பதை நாம் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். இந்நிலையில் சர்க்கரை அளவை ரதத்தில் அதிகரிக்காமல் தடுக்கும் உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும். இதுவரை நீங்கள் ஏகபோக வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். ஆனால் அதற்கு ஒரு குட் பாய் சொல்லுவது கட்டாயம்.
இந்த உணவுத் தேர்வில் மாவிலையின் பங்கு முக்கியமாக கருதப்படுகிறது. இந்நிலையில் மாவிலை சாறு ஒரு முக்கிய பங்காற்றுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குடலில் உள்ள கெட்ட செயல்பாடுகளை குறைக்கிறது. மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது. இதில் பெக்டின், வைட்டமின் சி மற்றும் நார்சத்து இருக்கிறது. இது கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை நோய் என்று ரெண்டுக்கும் ஒரே தீர்வாக இருக்கிறது.
இந்நிலையில் மாவிலைகளை 10 முதல் 15 தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். கொதிக்க வைத்த நீரை இரவு அப்படியே விட்டுவிடுங்கள். அடுத்த நாள் காலையில் அதை வடிகட்டி வெறும் வயிற்றில் குடியுங்கள். தொடர்ச்சியாக சில மாதங்கள் செய்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் அதிக மாற்றங்கள் நிகழலாம் என்று கூறப்படுகிறது.