/indian-express-tamil/media/media_files/2025/01/22/mbUEgUSRDDAce4INhgTI.jpg)
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் நரம்பு சார் பிரச்சனை பற்றி சித்த மருத்துவர் உஷா நந்தினி கூறுகிறார். சர்க்கரை நோயாளிகளுக்கு முக்கியமாக பாதிக்கப்படுவது நரம்பு மண்டலம். சாப்பிடும் உணவில் உள்ள முழுமையான சத்துக்கள் கிடைக்காமல் போனதே சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு காரணமாகிறது.
நரம்பு மண்டலம் என்று எடுத்தால் கை கால்களில் குடைச்சல், எரிச்சல் வரும். மதமதப்பு ஏற்படும். அடுத்து குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிப்பது, குடல் சார்ந்த பிரச்சனை ஏற்படும். சிறுநீர் நோயாளிகளுக்கு சிறுநீர் நரம்பு மண்டலம் பாதிப்பதால் ஏற்படுகிறது.
அடுத்தது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் நரம்பு சார் பிரச்சனையில் இதய பிரச்சனை முக்கியமானது. இதய துடிப்பு அதிகமாகவும் அல்லது குறைவாகவும் இருக்கலாம். பல பிரச்சனைகளுக்கு நரம்பு மண்டல பிரச்சனையினால் ஏற்படுகிறது என்பதே தெரியாமல் இருந்து விடுகிறது.
இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்க வேண்டும் என்றால் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்கு தொட்டாண் சிலுங்கி பொடி இது சுலபமாகவே கிடைக்கும். இந்த பொடியை அரை ஸ்பூன் எடுத்து 2 மிளகு தட்டிப் போட்டு கசாயம் போல் குடித்தால் ரத்ததில் இருக்கும் குளோடோதயான் குறைவதற்கும், லிக்குவிட் பெர்ஆக்சிடைட் குறைவதற்கும் உதவும். நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும் என மருத்துவர் கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.