/tamil-ie/media/media_files/uploads/2022/07/distilled-water.jpg)
நமது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று நீர். ஆனால் நம்மில் பலர் அதை சரியாக கண்டுகொள்வதில்லை. இந்நிலையில் கொதிக்க வைத்த தண்ணீர் குடிப்பதால் பல தொற்று நோய்கள் வராது என்று கூறப்படுகிறது. மஞ்சள் காமாலை, , டைபாய்டு காய்ச்சல் ஆகியவை வராமல் தடுக்க முடியும். ஆனால் இதேவேளையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரால் எந்த பயன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
குழாய் தண்ணீர்
நமது வீட்டின் குழாய்களிலிருந்து வரும் தண்ணீரானது, ஏற்கனவே குளோரின் கலந்து வருவதால் அதில் பேக்டீரியா இருக்காது. ஆனாலும் நமது வீட்டில் உள்ள குழாய்கள் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நோய் ஏற்படும் அபாயம் அதிகம்
கொத்திக்க வைத்த தண்ணீர்
கொதிக்கவைத்த தண்ணீர் குடிப்பது பழைய விஷயமாக இருக்கலாம். ஆனால் அதுவே சிறந்த வழியாக கருத்தப்படுகிறது. தண்ணீரை கொதிக்க வைத்தால், அதிலிருக்கும் கிருமிகள் நீக்கப்படும் ஆனால் அதில் இருக்கும் ரசாயனம் மற்றும் பல அசுத்தங்கள் நீங்கும் என்று நீங்கள் நினைப்பது தவறு. மேலும் தண்ணீரை கொதிக்க வைக்கும்போது குறைந்தது 20 நிமிடங்களாக கொதிக்க வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்
கொதிக்க வைத்த தண்ணீரை விட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நல்லது என்று கூறப்படுகிறது. ஆனால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரால் மினரல்ஸ் நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.