Advertisment

நீங்க சாப்பிடும் பலகாரம் எல்லாம் செரிக்க வேண்டாமா?  பாரம்பரியமான தீபாவளி லேகியம் ரெசிபி

தீபாவளி என்றாலே ஸ்வீட், பலகாரம் என்று எல்லாவற்றையும் சாப்பிடுவோம். இதனால் அஜீரணம் ஏற்படும். இதை தடுப்பதற்கே தீபாவளி லேகியம் செய்யப்படுகிறது. காலையில் எண்ணெய் வைத்து குளித்து விட்டு வந்தவுடன் இதை சாப்பிட்ட பிறகே மற்ற காரியங்களை செய்வார்கள். இதை ஈசியாகவே செய்துவிடலாம்.

author-image
WebDesk
New Update
நீங்க சாப்பிடும் பலகாரம் எல்லாம் செரிக்க வேண்டாமா?  பாரம்பரியமான தீபாவளி லேகியம் ரெசிபி

தீபாவளி என்றாலே ஸ்வீட், பலகாரம் என்று எல்லாவற்றையும் சாப்பிடுவோம். இதனால் அஜீரணம் ஏற்படும். இதை தடுப்பதற்கே தீபாவளி லேகியம் செய்யப்படுகிறது. காலையில் எண்ணெய் வைத்து குளித்து விட்டு வந்தவுடன் இதை சாப்பிட்ட பிறகே  மற்ற காரியங்களை செய்வார்கள். இதை ஈசியாகவே செய்துவிடலாம். 

Advertisment

தேவையான பொருட்கள்                         

அரிசி திப்பிலி – 10 கிராம்

கண்டந்திப்பிலி – 10 கிராம்

சுக்கு – 10 கிராம்

சீரகம்- அரை மேசைக்கரண்டி

மிளகு- ஒரு டீஸ் பூன்

வெல்லம் – 100 கிராம்

வெண்ணெய்- 100 கிராம்

தேன் – அரை கப்

ஓமம்- 1 டீஸ்பூன்

கிராம்பு – 4

சித்தரத்தை – 10 கிராம்

செய்முறை :

அரிசி திப்பிலி,  கண்டந்திப்பிலி, சுக்கு, சித்தரத்தை  இடித்து பொடி செய்து கொள்ளவும்.  இதைத்தொடர்ந்து கிராம்பு, ஓமம், சீரகம் , மிளகு, சுக்கு மற்றும் இடித்த பொடி ஆகியவற்றை வறுக்க வேண்டும். பின்பு இதில் தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

தொடர்ந்து இதை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துகொள்ளவும். தற்போது வெண்ணையை உருக்க வேண்டும். உருகிய வெண்ணையை வேறு பாத்திரத்தில் மாற்றிவிடவும். தொடர்ந்து இதே பாத்திரத்தில் அரைத்த விழுதை போட்டு கிண்ட வேண்டும். உருக்கிய வெண்ணை சேர்த்து கிளர வேண்டும். இதில் இருக்கும் வெண்ணைய் பிரிந்து வரும் வரை கிண்ட வேண்டும்.  அந்த பதத்திற்கு வந்ததும். அடுப்பை அணைத்துவிட்டு ஆறியதும் தேன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

இந்த லேகியத்தை தீபாவளி அன்று காலையில் சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படாது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment