மலச் சிக்கலுக்கு முற்றுப் புள்ளி வைக்கணுமா? சாப்பிடும் போது இத மட்டும் செய்யுங்க: டாக்டர் கே.ஆர். அக்ஷயன்
மலச்சிக்கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் குறித்து மருத்துவர் அக்ஷயன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இதனை தவிர்ப்பதன் மூலம் மலச்சிக்கல் பாதிப்பில் இருந்து விடுபட முடியும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
மலச்சிக்கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் குறித்து மருத்துவர் அக்ஷயன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இதனை தவிர்ப்பதன் மூலம் மலச்சிக்கல் பாதிப்பில் இருந்து விடுபட முடியும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
இன்றைய சூழலில் சாப்பிடும் போது உணவின் மீது பலருக்கு கவனம் இருப்பதில்லை என்று மருத்துவர் அக்ஷயன் கூறுகிறார். குறிப்பாக, டி.வி பார்ப்பாது, செல்போனில் பேசுவது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்திக் கொண்டே உணவருந்துகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஹெல்த் கஃபே தமிழ் யூடியூப் சேனலில் மருத்துவர் அக்ஷயன் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது. இதனை தடுக்க வேண்டுமானால், சாப்பிடும் போது குழு கவனமும் உணவின் மீது மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
பெரும்பாலும் உணவு சாப்பிடுகையில் அது வறண்டு இருக்கும் போது மலச்சிக்கல் ஏற்படக் கூடும். எனவே, சரியான அளவில் நீர் அருந்தி சாப்பிட வேண்டும் என மருத்துவர் அக்ஷயன் தெரிவித்துள்ளார். ஏனெனில், மலச்சிக்கல் என்பது வெறும் ஒரு அசெளகரியம் மட்டுமல்ல, அது உடலில் பல தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய பிரச்சனை ஆகும்.
சாதாரணமாக ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை மலம் கழிப்பது ஆரோக்கியமான குடல் இயக்கத்தைக் குறிக்கிறது. ஆனால், ஒரு வாரத்தில் மூன்று முறைக்கு குறைவாக மலம் கழிப்பதும், மலம் கழிக்க சிரமப்படுவதும், கடினமான மலம் வெளியேறுவதும் மலச்சிக்கல் என வரையறுக்கப்படுகிறது.
Advertisment
Advertisements
இதனை தடுக்க வேண்டுமானால் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.