திடீர் மாரடைப்பு, இதயத்தில் அடைப்பு... அருமருந்தாகும் இந்த ஜூஸ்; இப்படி செய்து குடிங்க: டாக்டர் கௌதமன்
திடீர் மாரடைப்பு, இதயத்தில் அடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு மஞ்சள் பூசணிக்காய், வெண் தாமரை மற்றும் தேன் கலந்த ஜூஸ் ஒரு அருமருந்தாக உள்ளதாக டாக்டர் கௌதமன் கூறுகிறார்.
திடீர் மாரடைப்பு, இதயத்தில் அடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு மஞ்சள் பூசணிக்காய், வெண் தாமரை மற்றும் தேன் கலந்த ஜூஸ் ஒரு அருமருந்தாக உள்ளதாக டாக்டர் கௌதமன் கூறுகிறார்.
இதயம் - அன்பின் இருப்பிடம். ஆனால், இன்று மாரடைப்பு, படபடப்பு என இதய நோய்கள் அதிகரித்து வருகின்றன. பரிசோதனைகளில் "எதுவும் இல்லை" என்று வந்தாலும் நீங்காத வலி, படபடப்பு போன்ற அறிகுறிகள் இயற்கையின் எச்சரிக்கைகளாகவே பார்க்கப்படுகின்றன என்று டாக்டர் கௌதமன் ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
இந்த இதயக் கோளாறுகளுக்கு ஆயுர்வேதத்தில் ஒரு எளிய மற்றும் சக்திவாய்ந்த தீர்வு உள்ளது. இது மஞ்சள் பூசணிக்காய், வெண் தாமரை மற்றும் தேன் ஆகியவற்றின் கலவையாகும்.
செய்முறை: மஞ்சள் பூசணிக்காய், வெண் தாமரை இதழ்கள் மற்றும் தேன் இவை மூன்றையும் ஒன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். பச்சையாக கிடைக்காத பட்சத்தில், வெண் தாமரைப்பூ இதழ் சூரணத்தையும் பயன்படுத்தலாம்.
இந்தக் கலவையை 300 மில்லி தண்ணீரில் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து, 100 மில்லியாகக் குறையும் வரை விடவும். பின்னர் வடிகட்டி, ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகவும். சர்க்கரை நோயாளிகள் தேன் சேர்க்காமல் பருகலாம். இந்த அற்புதமான கலவை பல்வேறு இதயக் கோளாறுகளுக்கு மருந்தாகச் செயல்படுகிறது.
Advertisment
Advertisements
இதய வலி: நெஞ்சுப் பகுதியில் ஏற்படும் அசௌகரியம் மற்றும் வலிகளைக் குறைக்க உதவுகிறது.
படபடப்பு: இதயத் துடிப்பு சீரற்று இருப்பதையும், படபடப்பு உணர்வையும் நிர்வகிக்கப் பயன்படுகிறது.
இரத்தச் சுழற்சி குறைபாடு: சீரான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, அடைப்புகளைத் தடுக்க உதவுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகான பராமரிப்பு: இதய அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு, உடல் சீக்கிரம் குணமடையவும், இதய நாளங்களை பலப்படுத்தவும் இது உதவுகிறது.
உயிரணு குறைபாடுகள்: ஆண்களில் ஏற்படும் விரைப்புத்தன்மை குறைபாடு (Erectile Dysfunction) மற்றும் விந்து முந்துதல் (Premature Ejaculation) போன்ற பிரச்சனைகளுக்கும் இது நன்மை பயக்கும். இதய ஆரோக்கியத்திற்கும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு வெறும் மருந்து மட்டும் போதாது. நம் வாழ்வியல் முறைகளையும் இயற்கை மருந்துகளையும் இணைக்கும்போதுதான் உண்மையான பாதுகாப்பு கிடைக்கும்.
ஆயுர்வேதத்தின்படி, உணவு, நீர், காற்று, உடல் சுத்தி, மனோசுத்தி, ஆத்ம சுத்தி, அபியாசம் மற்றும் தூக்கம் ஆகிய ஏழு தூண்களையும் பலப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான இதயத்தையும், நோயற்ற வாழ்வையும் பெற முடியும். இந்த ஏழு காரணிகளையும் முறையாகப் பின்பற்றுவதன் மூலம் இதய நோயற்ற நீண்ட ஆயுளைப் பெறலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.