தண்ணீர் இயற்கை அளித்த அருமருந்து. வெந்நீரை காலை வெறும் வயிற்றில் அருந்திட கிடைத்திடும் நன்மைகள் பற்றி டாக்டர் கௌதமன் ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். தினமும் காலையில் வெந்நீர் குடித்தால் தசைகளில் ஏற்படும் இறுக்கம் எளிதில் சீராகிடும்.
Advertisment
இதய துடிப்பையும், இரத்த ஓட்டத்தையும் சீராக்குகின்றது. சைனஸ் போன்ற பிரச்சனைகள் இல்லாத ஒரு வாழ்க்கையை தருகின்றது. நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம் போன்ற உபாதைகளை சரி செய்கின்றது. கல்லீரல் பிரச்சனை மற்றும் கொலஸ்ட்ராலை நீக்கி குணம் அடைந்திட செய்கின்றது.
கட்டுப்பாடற்ற சர்க்கரை பிரச்சனையை கட்டுக்குள் வைத்திடவும் மற்றும் மலச்சிக்கல் இல்லாத ஒரு வாழ்வியல் முறைக்கு வழி வகுக்கின்றது. உடல் பருமனை எளிதில் குறைத்திட உதவுகின்றது. உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள்,நோய் எதிர்ப்பு சக்தி போன்ற உடலுக்கு அத்தியாவசமான நன்மைகளை பெற்றிட பெரிதும் உதவி புரிகின்றது.
மிதமான சூட்டில் நீரை தினமும் காலையில் காலி வயிற்றில் குடித்து வந்தால், குடல் இயக்கம் அதிகரிக்கும். வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது. வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.
Advertisment
Advertisements
பருக்களை விரட்ட தொடர்ந்து வெந்நீரைக் குடித்து வாருங்கள். முகமும் பொலிவடையும். அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி, மேலும் முடிகள் வளர வழி வகுக்கும்.
வெந்நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். மேலும் நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களும் வெந்நீரில் கரைந்து விடும். மிதமான சூட்டில் நீரை தினமும் காலையில் காலி வயிற்றில் குடித்து வந்தால், குடல் இயக்கம் அதிகரிக்கும்.
தேவையில்லாமல் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் குறைத்தாலே எடை குறைந்துவிடும். அதற்கு, தினமும் காலையில் மிதமான் சுடுநீரைக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொழுப்புக்கள் சரசரவென்று குறைந்து, எடையும் குறையும். ஒரு சொட்டு எலுமிச்சை சாற்றையும் சுடுநீருடன் சேர்த்துக் கொண்டால் அது உடம்பில் மேலும் கொழுப்பு சேர விடாமல் தடுக்கும்.
மாதவிடாய் நாட்களில் பெண்கள் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும். வெந்நீர் குடிப்பதால் அத்தகைய நச்சுப் பொருட்கள் விரைவில் வெளியேறிவிடும். இதனால் வேகமாக வயதாவது குறையும். சருமம் பளபளப்பாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.