மலச்சிக்கலுக்கு சுமுக தீர்வு... இந்த நேரத்துல இப்படி செய்த டிரிங்க் குடிங்க: டாக்டர் ஜெயரூபா
மலச்சிக்கலால் ஏற்படும் பாதிப்பு குறித்து மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார். மேலும், இதனை எவ்வாறு வீட்டு வைத்திய முறையில் குணப்படுத்தலாம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மலச்சிக்கலால் ஏற்படும் பாதிப்பு குறித்து மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார். மேலும், இதனை எவ்வாறு வீட்டு வைத்திய முறையில் குணப்படுத்தலாம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு நாளைக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சரியான அளவு எடுத்துக் கொள்ளாததும் மலச்சிக்கலுக்கான முக்கிய காரணம் என்று மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார்.
Advertisment
இவ்வாறு மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டு வைத்திய முறையின் மூலமாக மலச்சிக்கலை கட்டுப்படுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்காக, சுமார் 200 மில்லி லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.
இத்துடன் மூன்று சிட்டிகை இந்துப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து கலக்க வேண்டும். அதன் பின்னர், இதனை வடிகட்டி 5 மில்லி லிட்டர் விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். குறிப்பாக, காலை நேரத்தில் இதனை குடிக்கும் போது மலச்சிக்கல் தீரும் என்று மருத்துவர் ஜெயரூபா அறிவுறுத்துகிறார்.
மலச்சிக்கல் பிரச்சனை ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள் இந்த பானத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் 30 நிமிடங்களில் மலம் கழிக்கலாம் என்று மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார். இது தவிர மற்றொரு எளிய முறையும் இருக்கிறது.
Advertisment
Advertisements
அதன்படி, சுடுதண்ணீரில் மூன்று சிட்டிகை இந்துப்பு சேர்த்து குடித்தாலும் மலச்சிக்கல் குணமடையும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், சிலருக்கு எப்போதுமே மலச்சிக்கல் பாதிப்பு இருக்கும். அத்தகையவர்கள், வேறு ஒரு மருந்தை உபயோகிக்கலாம் என்று மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார்.
இதற்காக ஒரு டீஸ்பூன் கடுக்காய் பொடியை இரண்டு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்ட வேண்டும். இத்துடன் 5 மில்லி லிட்டர் விளக்கெண்ணெய் சேர்த்து இரவு நேரத்தில் குடிக்கலாம். இந்த மருந்தும் மலச்சிக்கல் பாதிப்பை குணப்படுத்தும் என்று மருத்துவர் ஜெயரூபா அறிவுறுத்துகிறார்.
நன்றி - Cosmo Health Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.