New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/19/klNK1GpbzAESsXfUxazb.jpg)
இன்றைய தலைமுறையினர் அதிகமாக துரித உணவுகளை சாப்பிடுகின்றனர். குறிப்பாக, நேரம் காலமின்றி எப்போது வேண்டுமானாலும் துரித உணவுகளை சாப்பிடும் வகையில் நிறைய கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக பல பேருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அதில் குறிப்பிடத்தக்க வகையில் பசியின்மை, செரிமான கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் காணப்படுகிறது. இதேபோல் அல்சர் காரணமாக வயிறு வலியும் இருக்கும். மேலும், குமட்டல் மற்றும் வாந்தி வருவது போன்ற உணர்வும் உள்ளதாக சிலர் கூறி வருகின்றனர்.
இது போன்ற பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்திய முறையில் மருந்து எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர் காமராஜ் தெரிவித்துள்ளார். அஷ்டவர்க்க சூரணம் என்ற மருந்தை எடுத்துக் கொள்வதன் மூலம் இதற்கு தீர்வு காண முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம், ஓமம், இந்துப்பு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை இதற்கு மருந்தாக பயன்படுத்தலாம். அந்த வகையில் இவை அனைத்தையும் சம அளவில் எடுத்து பொன் நிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து, இவை அனைத்தையும் தனித்தனியாக அரைத்து பின்னர் ஒன்றாக கலந்து ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ளலாம்.
இந்த பொடியை தேவைப்படும் நேரத்தில் சுமார் அரை ஸ்பூன் எடுத்து சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம். இப்படி செய்தால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும் என மருத்துவர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும், இதில் இரசாயனங்கள் எதுவும் சேர்க்காததால் ஒவ்வாமை மற்றும் பக்க விளைவுகள் ஏற்படும் பாதிப்பும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.