/indian-express-tamil/media/media_files/2025/02/19/uwTZo1d6Bc1giw7LkMub.jpg)
மரவள்ளிக் கிழங்கை நிறைய பேர் பச்சையாக சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். ஆனால், இந்தக் கிழங்கை சமைக்காமல் சாப்பிட்டால் உடல் நலனில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக மரவள்ளிக் கிழங்கை நன்றாக ஊறவைத்து பின்னர், வேக வைத்து சாப்பிடும் போது எண்ணற்ற சத்துகள் நமக்கு கிடைக்கிறது. அதன்படி, இதில் இருந்து நம் ஆரோக்கியம் எவ்வாறு மேம்படுகிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
மரவள்ளிக் கிழங்கை ஒரு கப் அளவிற்கு வேக வைத்து சாப்பிட்டால், குடல் பகுதியில் இருக்கும் நல்ல கிறுமிகளுக்கு உணவாக அமையும் என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நம் செரிமான மண்டலம் சீராக அதன் வேலையை செய்யும்.
மேலும், இதில் இருக்கும் வைட்டமின் ஏ சத்துகள் கண்களின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் கண் பாதிப்புகள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறையும். நமது கண் பார்வையும் கூர்மையாகும்.
மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் வைட்டமின் சி ஃபோலேட் சத்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதனால், அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இவை நம் அன்றாட வேலையை சீராக செய்ய உதவி செய்கிறது.
உடல் பருமனாக இருப்பவர்கள் மரவள்ளிக் கிழங்கை எடுத்துக் கொள்ளலாம். இதன் நார்ச்சத்துகள் பசி எடுக்கும் உணர்வை கட்டுப்படுத்துகின்றன. குழந்தைகளுக்கு இந்தக் கிழங்கை வேகவைத்து கொடுப்பதன் மூலம் அவர்களது மூளையின் ஆரோக்கியம் சீராகும்.
ஆனால், இவ்வளவு சத்துகள் மிகுந்த மரவள்ளிக் கிழங்கை பச்சையாக சாப்பிடும் போது நரம்பு பிரச்சனைகள், சிறுநீரக கோளாறு ஆகியவை ஏற்படும் ஆபத்து இருக்கிறது என மருத்துவர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.