இன்றைய சூழலில் ஞாபக மறதி வருவதற்கு பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதனை கட்டுப்படுத்துவதற்கு வீட்டு வைத்திய முறையை பின்பற்றலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, வல்லாரை கீரையை எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
Advertisment
ஏனெனில், மூளை தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை சரி செய்யக் கூடிய ஆற்றல் வல்லாரை கீரைக்கு இருப்பதாக மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், ஞாபக மறதி மட்டுமின்றி பதற்றமான மனநிலையை குறைக்கும் பண்புகள் வல்லாரை கீரையில் இருக்கிறது.
மேலும், மன அழுத்தத்தையும் குறைத்து நன்றாக உறக்கம் வரும் தன்மையை வல்லாரை கீரை அதிகரிக்கிறது. நாம் படித்ததை மீண்டும் ஞாபகப்படுத்தி பார்க்கவும், கவனக்குவிப்புக்கும், முடி வளர்ச்சியையும் இது அதிகப்படுத்துகிறது. எனவே, ஞாபக மறதி இருப்பதாக கருதுபவர்கள், தங்கள் உணவில் வல்லாரை கீரை இடம்பெறுவதை உறுதி செய்யலாம்.
இதேபோல், மஞ்சளும் ஞாபக மறதியை குறைப்பதாக உதவுகிறது என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மஞ்சளில் இயற்கையாகவே குர்குமின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இதனையும் தேவையான அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று அவர் கூறுகிறார். இதேபோல், ஜின்கோ பிலோபா என்ற வகை தாவரமும் ஞாபக மறதியை கட்டுப்படுத்த உதவுகிறது.
Advertisment
Advertisements
இது தவிர சீரான உறக்கத்தை தினசரி கடைபிடிக்க வேண்டும். சரியாக தூங்காமல் இருந்தால் அது நினைவாற்றல் திறனை பாதிக்கும் என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மன அழுத்தம் இருந்தால் கார்டிசால் அதிகரிக்கும். இது அதிகரிக்கும் போது ஞாபக மறதி ஏற்படும் என்று அவர் கூறுகிறார்.
இதேபோல், காபி மற்றும் மதுபானத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது ஞாபக மறதியை ஏற்படுத்தும். வைட்டமின் பி12 குறைபாடும் நினைவாற்றலை குறைக்கும். இது போன்ற காரணிகளை சரிசெய்து கொள்வதன் மூலம் ஞாபக மறதியை குறைக்க முடியும்.
நன்றி - Doctor Karthikeyan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.