/indian-express-tamil/media/media_files/2025/06/26/hair-grwoth-drink-2025-06-26-16-20-54.jpg)
இன்றைய காலகட்டத்தில், முடி உதிர்வு பிரச்சனை என்பது இளைஞர்களிடையே பொதுவான ஒன்றாக மாறி விட்டது. குறிப்பாக, வயது மற்றும் பாலின பேதமின்றி நிறைய பேரிடம் இந்த பிரச்சனை காணப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தூக்கமின்மை, உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் சத்துக் குறைபாடு என்று முடி உதிர்வுக்கு ஏராளமான காரணிகள் இருக்கிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர். இவற்றை கண்டறிந்து சரி செய்வது அவசியமாகும்.
எனினும், முடி உதிர்வை தடுக்க ஷாம்பூ, சீரம் போன்ற பொருட்களை உபயோகிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு சத்தான உணவுகளை சாப்பிடுவதும் முக்கியம். இதற்காக வீட்டில் இருக்கும் பொருளைக் கொண்டு முடி உதிர்வு பிரச்சனையை எவ்வாறு சரி செய்யலாம் என்று மருத்துவர் நந்தகோபாலன் தெரிவித்துள்ளார்.
இதற்காக, பாத்திரத்தில் ஒரு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் அப்படியே ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் இந்தக் கறிவேப்பிலை மற்றும் அதனை ஊற வைத்த தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
இந்த தண்ணீர் சுமார் 150 மில்லி லிட்டர் வரும் அளவிற்கு கொதிக்க வைக்க வேண்டும். இதன் பின்னர், தண்ணீரை மட்டும் தனியாக வடிகட்டி அத்துடன் அரை டீஸ்பூன் நெய் சேர்த்து கலக்கி குடிக்க வேண்டும் என்று மருத்துவர் நந்தகோபாலன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து 21 நாட்களுக்கு செய்தால் முடி உதிர்வு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தி விடலாம் என்றும் அவர் அறிவுறுத்துகிறார். அதன்படி, முடி உதிர்வு பிரச்சனைக்கு இயற்கை வழியில் தீர்வு காண வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த முறையை பின்பற்றலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.