ஆண்மையை அதிகரிக்கும் இயற்கை வயாகரா... எந்த பக்க விளைவும் இல்லை; பாலுடன் சேர்த்து குடிங்க: டாக்டர் நித்யா யோசனை

இயற்கையான முறையில் வயாகரா தயாரித்து பயன்படுத்துவது எப்படி என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதன் மூலம் விறைப்புத் தன்மை பாதிப்பை குணப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இயற்கையான முறையில் வயாகரா தயாரித்து பயன்படுத்துவது எப்படி என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதன் மூலம் விறைப்புத் தன்மை பாதிப்பை குணப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Erection issue

ஒவ்வொரு ஆண்களுக்கும் அவர்களின் வயதுக்கு ஏற்றார் போல் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த வகையில் இன்றைய சூழலில் விறைப்புத் தன்மை சார்ந்த பிரச்சனைகள் ஆண்களிடையே இருக்கிறது என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை சத்குரு சாய் கிரியேஷன்ஸ் யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

குறிப்பாக, தற்போது சுமார் 30 வயதான நபர்களுக்கு கூட இது போன்ற பிரச்சனைகள் இருப்பதாக அவர் கூறுகிறார். இத்தகைய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் மன அழுத்தம் அடையக் கூடாது என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார். ஏனெனில், இது விறைப்புத் தன்மை பிரச்சனையை தீவிரப்படுத்தும் என்று அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.

சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனாக இருப்பவர்கள், புரோஸ்டேட் பகுதியில் ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக விறைப்புத் தன்மையில் பிரச்சனை ஏற்படக் கூடும். இதனை போக்க சில உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றலாம் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.

இதற்காக உடல் உஷ்ணத்தை குறைப்பது அவசியம். இது தவிர கால்சியம், காப்பர் மற்றும் சிங்க் சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், நீர்முள்ளி விதைகள், வெங்காய விதைகள், அரச விதைகள், ஆல விதைகள் மற்றும் முள்ளங்கி விதைகள் ஆகியவற்றை சேர்த்து செய்த மருந்துகளை சித்த மருத்துவத்தில் இருந்து பயன்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். 

Advertisment
Advertisements

இந்த விதைகள் அனைத்தையும் சுத்தம் செய்து விட்டு, பாலில் வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்னர், இந்த விதைகள் அனைத்தையும் வெயிலில் உலர்த்தி எடுக்க வேண்டும். இதையடுத்து, இவற்றை பொடியாக அரைக்க வேண்டும். இவற்றுடன் ஒரு சிட்டிகை அளவு ஜாதிக்காய் பொடி சேர்த்து இரவு நேரத்தில் பாலில் கலந்து குடிக்கலாம் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.

இது இயற்கையான வயாகரா போன்று செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் போது 7 நாட்களுக்கு பின்னர் அதற்கான மாற்றம் உடலில் தென்படும். எனவே, இந்த மருந்தை சரியான முறையில் பயன்படுத்தினால் விறைப்புத் தன்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Foods to improve sexual health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: