சுகர் இருக்கா? முளைகட்டிய இந்த தானியம் காலையில் சாப்பிடுங்க; 30 நாளில் ரிசல்ட்: டாக்டர் நித்யா
சர்க்கரை நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய உணவு முறை குறித்து பல்வேறு தகவல்களை மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதனை பின்பற்றுவதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் மாற்றம் அடைந்து வரும் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றால் பெரும்பாலானோருக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இந்த சர்க்கரை நோயின் விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.
Advertisment
சிறுதானிய உணவுகள் எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோயை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, கேழ்வரகு, தினை, சாமை மற்றும் குதிரைவாலி போன்றவற்றை அவசியம் எடுத்துக் கொள்ளலாம். இதில் பிரதானமாக கேழ்வரகு நம் உணவில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
குறிப்பாக, முளைகட்டிய கேழ்வரகு சாப்பிட வேண்டும் என மருத்துவர் நித்யா பரிந்துரைத்துள்ளார். அதனடிப்படையில், முளைகட்டிய கேழ்வரகுடன், ஒரு ஸ்பூன் அளவிற்கு முளைகட்டிய வெந்தயம் மற்றும் கருப்பு எள் ஆகியவற்றையும் சேர்த்து சாப்பிட வேண்டும். இவற்றை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் கால் எரிச்சல், கண் நரம்பு பாதிப்பு, நரம்பியல் கோளாறு ஆகியவை குணமாகும் என மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.
எனவே, இந்த மூன்றையும் புட்டு வேகவைப்பது போல சமைத்து காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதனால், மலச்சிக்கல் பிரச்சனையும் குணமடையும். சர்க்கரை நோயாளிகளுக்கு சருமத்தில் சுருக்கம், தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சனையும் இருக்கும். இந்த உணவை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதன் மூலம் இவை இரண்டையும் கட்டுப்படுத்த முடியும்.
Advertisment
Advertisements
இதேபோல், நாவல் கொட்டை சூரணம் சாப்பிடுவதும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். இதனை, 100 கிராம் அளவிற்கு எடுத்து அத்துடன் 30 கிராம் நெல்லிக்காய் பொடி, மஞ்சள் பொடி 30 கிராம் சேர்த்து கலக்க வேண்டும். இந்தப் பொடியை காலை மற்றும் இரவு என இரு வேளையும், ஒரு கிளாஸ் சுடுதண்ணீரில் 4 கிராம் அளவிற்கு கலந்து குடிக்கலாம்.
இவற்றின் வாயிலாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
நன்றி - Mr Ladies Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.