கண்ணை சுற்றி வட்ட வட்டமாக கருவளையம்... இந்த பொடியை மட்டும் இப்படி சாப்பிடுங்க: டாக்டர் நித்யா டிப்ஸ்

கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுவதற்கான காரணத்தை மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். மேலும், இதனை எவ்வாறு குணப்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை இப்பதிவில் பார்க்கலாம்.

கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுவதற்கான காரணத்தை மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். மேலும், இதனை எவ்வாறு குணப்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை இப்பதிவில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Dark cir

நம் கண்களைச் சுற்றி தோன்றும் கருவளையங்கள் வெறும் அழகு பிரச்சனை மட்டுமல்ல; அவை நமது உடலில் இருக்கும் ஏதேனும் ஒரு குறைபாட்டைக் குறிக்கலாம். கருவளையங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கான எளிய தீர்வுகள் குறித்து மருத்துவர் நித்யா மிஸ்டர் லேடிஸ் யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஹார்மோன் சமநிலையின்மை, தைராய்டு பிரச்சனை, PCOD போன்றவற்றின் அறிகுறியாக கருவளையங்கள் உருவாகலாம். கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளும் கருவளையங்களாக வெளிப்படலாம். உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் மோசமான இரத்த ஓட்டம் கருவளையங்களுக்கு காரணமாக அமைகின்றன. போதுமான தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் ஆகியவை கருவளையங்களுக்கு முக்கிய காரணிகளாகும்.

அதன்படி, கருவளையத்தை போக்குவதற்கான சில வழிமுறைகளையும் மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். தினமும் இரவில் குறைந்தது 6 மணிநேரம் தரமான தூக்கம் கருவளையங்களை குறைக்க அவசியம் ஆகும். இது தவிர, அரை தேக்கரண்டி சீரகம் மற்றும் அரை தேக்கரண்டி சோம்பு ஆகியவற்றை இரவில் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் இந்த கலவையை கொதிக்க வைத்து குடிக்கலாம். இது குடல் மற்றும் கல்லீரலில் உள்ள கழிவுகளை நீக்கி, செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்.

மேலும், 2-3 கைப்பிடி புதினா இலைகளை அரைத்து சுமார் 60 மி.லி. சாறு எடுக்கவும். இதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, 7-10 நாட்களுக்கு காலையில் குடிக்கவும். இது நச்சுக்களை வெளியேற்றி, முகப்பரு, வறண்ட சருமம், அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை போக்க உதவும். 

Advertisment
Advertisements

இரத்த சுத்தி சூரணம், இரத்த சுத்திகரிப்புக்கும், நச்சுக்களால் ஏற்படும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கும் சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுகிறது. இந்தப் பொடியை கால் தேக்கரண்டி அளவில் தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம் என்று மருத்துவர் நித்யா பரிந்துரைக்கிறார்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Superfoods to reduce dark circles

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: