/indian-express-tamil/media/media_files/2025/03/28/bB1nvyeKwOciJFiWl1G1.jpg)
தற்போது நிறைய பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கிறது. குறிப்பாக, வயது பேதமின்றி இளம் வயதினர் பலரும் இதனால் அவதிப்படுகின்றனர். அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ்களை மருத்துவர் நித்யா குறிப்பிட்டுள்ளார்.
கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகியவை கலந்த திரிபலா பொடி, சுகரின் அளவைக் குறைக்க பெரிதும் உதவி செய்கிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் இதனை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார். இது தவிர, தான்றிக்காய், மாசிக்காய் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை 100 கிராம் அளவில் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொடியை காலை மற்றும் மாலை என இருவேளையும் சாப்பிடுவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பாக ஒரு ஸ்பூன் அளவில் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு ஒரு மாதம் தொடர்ச்சியாக பின்பற்றி இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை பரிசோதித்து பார்த்தால், அவை குறைந்து இருப்பதை நாம் அறிய முடியும்.
இவற்றில் அதிகமாக துவர்ப்பு சுவை இருக்கிறது. எனவே, சுகரை குறைக்கும் ஆற்றல் இவற்றுக்கு இருப்பதாக மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அந்த வகையில், இந்தப் பொடியை குறிப்பிட்ட அளவில் சுடுதண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இது மட்டுமின்றி உடல் எடையை சீராக பராமரிக்க உடற்பயிற்சிகள் மேற்கொள்வதும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் என்று மருத்துவர் நித்யா குறிப்பிட்டுள்ளார்.
சாதாரணமாக சர்க்கரை நோய் ஏற்பட்டால் அவை இரத்த அழுத்தம் மற்றும் இருதய கோளாறு போன்ற பல்வேறு இணை நோய்களுக்கும் வழிவகுக்கக் கூடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அதனடிப்படையில், ஆரோக்கியமான வாழ்விற்கு சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பது அவசியமாகிறது.
நன்றி - Dr.Nithya's Varam Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.