நாள்பட்ட சுகரையும் குறைக்கும் வல்லமை... இந்த சாறை இப்படி சேர்த்து சாப்பிட்டு பாருங்க: டாக்டர் நித்யா
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாவல் விதை சூரணத்தையும், ஆடு தீண்டாப்பாளை மூலிகையின் சாறையும் மருந்தாக சாப்பிடலாம் என்று மருத்துவர் நித்யா பரிந்துரைக்கிறார்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாவல் விதை சூரணத்தையும், ஆடு தீண்டாப்பாளை மூலிகையின் சாறையும் மருந்தாக சாப்பிடலாம் என்று மருத்துவர் நித்யா பரிந்துரைக்கிறார்.
இன்றைய சூழலில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதியவர்களை விட இளம் வயதினரும் இதனால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
Advertisment
சர்க்கரை நோய் அதிகரிப்பதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றம் காரணமாக சர்க்கரை நோய் அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. அதன்படி, சர்க்கரை நோயாளிகள் இயற்கையான முறையில் எவ்வாறு மருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாவல் விதை சூரணத்தை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவ நித்யா அறிவுறுத்துகிறார். இதை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டாலும் கூட சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும்.
எனினும், ஆடு தீண்டாப்பாளை என்ற மூலிகையையும் மருந்தாக சேர்த்து எடுக்கும் போது கூடுதல் பலன் அளிக்கும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அந்த வகையில் இதனை பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட வழிமுறை இருக்கிறது.
Advertisment
Advertisements
அதன்படி, ஆடு தீண்டாப்பாளை மூலிகையின் சாறை தனியாக எடுத்து, அதனை நாவல் விதை சூரணத்துடன் சேர்த்து கலந்து வெயிலில் காய வைக்க வேண்டும். இந்த மருந்து நன்றாக உலர்ந்ததும் இதனை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா பரிந்துரைக்கிறார்.
இப்படி செய்யும் போது நாள்பட்ட சர்க்கரை நோயாக இருந்தாலும் குணமடையும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும், இவ்வாறு ஆடு தீண்டாப்பாளை மூலிகையின் சாறு எடுத்து சாப்பிட முடியாதவர்கள், நாவல் விதை பொடியை மட்டும் தனியாக சாப்பிடுவது பலன் அளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - Doctor Interview Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.