/indian-express-tamil/media/media_files/2025/06/04/9qObKkguFHmpw3h5vAvB.jpg)
இன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் குழந்தையின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வு குறித்து மருத்துவர் நித்யா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தகவல்களை சத்குரு சாய் கிரியேஷன்ஸ் யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடலில் இருக்கக் கூடிய பிரச்சனைகளை சீரமைப்பதன் மூலம் இதற்கு தீர்வு காண முடியும். உணவு முறை மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனையை சரி செய்யலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு விறைப்புத் தன்மை பிரச்சனை மற்றும் விந்தணுக்கள் குறைபாடு காணப்படுகிறது. அதன்படி, இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். இது தவிர கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த மூலிகைகளை இதற்கு மருந்தாக பயன்படுத்தலாம்.
உடல் உஷ்ணம் அதிகமாக இருந்தாலும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். எனவே, உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதும் அவசியம். சித்த மருத்துவத்தின் படி ஒரு லேகிய வகை மருந்தை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.
இதற்கு முக்கியமாக பாதாம் பிசின், முருங்கை பிசின் மற்றும் கருவேலம் பிசின் ஆகியவை தேவைப்படும். இந்தப் பிசின்களை நன்றாக கழுவி, பின்னர் உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும். இது தவிர பூனைக்காலி விதைகள், அமுக்குரா கிழங்கு, சதாவரி கிழங்கு, பனங்கிழங்கு, வெட்டிவேர் ஆகிய அனைத்தையும் பாலில் வேக வைத்து, அதன் பின்னர் காய வைத்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், வெள்ளரி விதைகள், வெங்காய விதைகள், பூசணி விதைகள் ஆகியவற்றை அரைத்து பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் பிசினுடன் சேர்த்து நெய் மற்றும் கருப்பட்டியுடன் பாகு பதத்திற்கு அடுப்பில் வைத்து கிளற வேண்டும். இவ்வாறு செய்தால் லேகியம் தயாராகி விடும். இந்த மருந்து ஆண்மைக் குறைவு பிரச்சனையை சீரமைக்கிறது என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.