/indian-express-tamil/media/media_files/2025/02/08/m02A74IQ6dR6Lpn1Qsr9.jpg)
நம் உடலில் இரத்த நாளங்கள் மிகவும் முக்கியமானவை. இவற்றில் அடைப்புகள் ஏற்பட்டால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். கொழுப்புகள் இதில் அடைப்புகளாக படிந்து விடுகின்றன.
இந்தப் பிரச்சனை இருப்பவர்கள் அதிகமான கொழுப்பு சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிடக் கூடாது. எண்ணெய் அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகள், அதிகமாக பொறித்து எடுக்கப்பட்ட உணவுகளை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும் என மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.
கெட்ட கொழுப்புகளை கரைக்க கருப்பு கொள்ளு பெரிதும் உதவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உடலை வலிமையாக்கி, நரம்புகளை பலப்படுத்த தேவையான புரதமும் கருப்பு கொள்ளில் நிறைந்திருக்கிறது. அதனடிப்படையில், கருப்பு கொள்ளை நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை குடிக்கலாம்.
குறிப்பாக, காலை நேரத்தில் வெறும் வயிற்றில் இந்த கொள்ளு வேக வைத்த தண்ணீரை குடிக்கலாம். இவ்வாறு காலையில் குடிக்க முடியாதவர்கள், தங்களுக்கு வசதியான நேரத்தில் இதை பருகலாம். ஆனால், கண்டிப்பாக இதனை தொடர்ந்து 30 நாட்களுக்கு குடிக்க வேண்டும் என மருத்துவர் நித்யா பரிந்துரைக்கிறார்.
இவ்வாறு குடிக்கும் போது உடலில் இருக்கக் கூடிய தேவையற்ற கொழுப்புகள் நீங்கி, இரத்த நாளம் சுத்தமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - Sadhguru sai creations Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.