100 வயாகரா மாத்திரைக்கு சமம்... இந்த ஒரு பொடியை பாலில் கலந்து; இந்த நேரத்துல குடித்தால் போதும்: டாக்டர் நித்யா
விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள தகவல்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள தகவல்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
வயாகரா மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் ஆண்களிடையே நிலவுகிறது. இந்த சூழலில் ஆண்மையை அதிகரிக்கும் ஆற்றல் குறித்து மைல்ஸ்டோன் மீடியா என்ற யூடியூப் சேனலில் மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
Advertisment
எல்லோரது மனதிலும் அஸ்வகந்தா என்பது இயற்கையான வயாகரா என்று பதிவாகி விட்டதாக மருத்துவர் நித்யா கூறுகிறார். புற்றுநோய் செல்களை அழிப்பதில் தொடங்கி துக்கமின்மை பிரச்சனையை சீராக்குவது என அஸ்வகந்தாவிற்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன.
இது தவிர ஆண்களுக்கு இருக்கும் விறைப்புத் தன்மை குறைபாடு மற்றும் விந்தணுக்கள் குறைபாடு போன்ற பிரச்சனைகளுக்கும் அஸ்வகந்தா பயன்படுவதாக மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, இதனை பயன்படுத்துவதற்கு என சில வழிமுறைகள் இருக்கின்றன.
பொதுவாக அஸ்வகந்தா பொடி கடைகளில் சாதாரணமாக கிடைக்கும். இதனை மருந்தாக எடுத்துக் கொள்வதற்கு முன்பாக பசும்பாலில் வேக வைத்து பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அதன்படி, அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதன் அடிப்பகுதியில் சிறிது பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதன் மேற்புறத்தில் ஒரு வெள்ளைத் துணியில் அஸ்வகந்தா பொடியை போட்டு வேகவைத்த பின்னர் இதனை பயன்படுத்தலாம்.
Advertisment
Advertisements
இதனை சாதாரணமாக பாலில் கலந்து குடிக்கலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். மேலும், இது டானிக் மற்றும் லேகியம் வடிவத்திலும் கிடைக்கிறது. இவற்றையும் வாங்கி பயன்படுத்தலாம். சர்க்கரை நோயாளிகள் இதனை சூரணமாக சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
இதே போன்று சிட்டுக் குருவி லேகியம் ஆண்களின் விறைப்புத் தன்மையை அதிகரிக்கும் மருந்தாக பயன்படுகிறது என பலர் கூறுவார்கள். இதிலும், அஸ்வகந்தா உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை சேர்த்து லேகியம் வடிவில் வைத்திருப்பதாக மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
இது போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது, மருத்துவரின் அறிவுரையை பின்பற்றுவது தேவையில்லாத சிக்கல்களை தவிர்க்க உதவும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.