சிலருக்கு அடிக்கடி கை, கால்களில் நடுக்கம் ஏற்படும். இவ்வாறு நடுக்கம் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதனை எவ்வாறு குணப்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மிஸ்டர் லேடிஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Advertisment
வயதான காலத்தில் நிறைய பேருக்கு கை, கால் நடுக்க ஏற்படும். நரம்புகளில் ஏற்படும் தளர்வு காரணமாக இவை உருவாகிறது. எனினும், இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கும் நரம்பு மண்டலத்தில் குறைபாடு இருப்பதன் காரணமாக இது போன்ற நடுக்கம் ஏற்படுகிறது என்று மருத்துவர் நித்யா கூறுகிறார்.
அந்த வகையில் சில வகையான உணவுகளை நரம்பு மண்டல பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது என்று அவர் கூறுகிறார். அதிகமான கிழங்கு வகைகள், பருப்புகள் போன்ற உணவுகளை சாப்பிடக் கூடாது என்று மருத்துவர் நித்யா கூறுகிறார். ஏனெனில், இவை நம் உடலில் வாதத்தை அதிகப்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மாற்றாக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் நித்யா பரிந்துரைக்கிறார். மேலும், சித்த மருத்துவத்தில் ஒரு சில மூலிகை பொடிகளையும் இதற்கு மருந்தாக பயன்படுத்தலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
இதற்காக பூனைக்காலி விதைகள், வெட்பாலை அரிசி, பேரரத்தை, கருப்பு உளுந்து ஆகிய அனைத்தையும் பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை அரை ஸ்பூன் அளவிற்கு எடுத்து அதனை சுடுதண்ணீரில் கலந்து, இத்துடன் அரை ஸ்பூன் நெய் சேர்த்து குடிக்கலாம். இவ்வாறு குடிக்கும் போது நரம்பு மண்டலம் வலுவடையும்.
இதன் மூலம் நம்முடைய உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, நரம்பு மண்டலத்தை வலிமையாக்கி, கை, கால் நடுக்கத்தை குறைக்க முடியும் என்று மருத்துவர் நித்யா கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.