/indian-express-tamil/media/media_files/2025/04/04/jnRobdvWdlNM3uPMFg5V.jpg)
உடலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பாக கல்லீரல் விளங்குகிறது என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அந்த வகையில் கல்லீரலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சில அறிகுறிகள் மூலமாக கண்டறியலாம் என்று அவர் கூறுகிறார்.
காலை எழுந்ததும் சிலரது முகம் வீக்கமாக காணப்பட்டு, கண்கள் லேசான மஞ்சள் நிறத்தில் தெரியும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இது தவிர அடிக்கடி வாந்தி வருவது போன்ற உணர்வு சிலருக்கு இருக்கும். கால் பாதங்களில் எரிச்சல், பாத வெடிப்பு ஆகியவையும் கல்லீரல் பாதிப்பின் வெளிப்பாடாக இருக்கும்.
அந்த வகையில் கல்லீரலில் இருக்கும் நச்சுகளை அகற்றுவதன் மூலம் இது போன்ற பிரச்சனையில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் நித்யா பரிந்துரைக்கிறார். இதற்கான பிரத்தியேக மூலிகைகள் மற்றும் உணவு முறைகள் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இதற்காக தூதுவளையை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார். கல்லீரலில் இருக்கும் கொழுப்பு மற்றும் நச்சுகளை முற்றிலும் வெளியேற்ற இது உதவுகிறது. அதன்படி, தூதுவளையை நன்றாக அரைத்து சாறு மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இத்துடன் கருஞ்சீரக பொடியை இரண்டு அல்லது மூன்று சிட்டிகை கலந்து குடிக்க வேண்டும். குறிப்பாக, தினசரி காலை நேரத்தில் 20 முதல் 30 மில்லி லிட்டர் அளவில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து வந்தால், கல்லீரலில் இருக்கும் நச்சுகள் அனைத்தும் வெளியேறி விடும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
எனினும், உடலில் வேறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த சாறை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவர்களின் ஆலோசனையை பெற வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நன்றி - Health Cafe Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.