நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த அரிசி தான் டாப்; 10 நாள் ஃபாலோ பண்ணுங்க: டாக்டர் பன்னீர்செல்வம்
நீரிழிவு நோயாளிகள் பின்பற்றக் கூடிய உணவு முறை குறித்து மருத்துவர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இதனை பின்பற்றுவதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீரிழிவு நோயாளிகள் பின்பற்றக் கூடிய உணவு முறை குறித்து மருத்துவர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இதனை பின்பற்றுவதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் சாப்பிடும் உணவு இரத்தத்தில் குளூகோஸாக மாறி, ஆற்றலாக உருவெடுக்கும். ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த குளூகோஸ், ஆற்றலாக மாறுவது இல்லை என மருத்துவர் பன்னீர்செல்வம் கூறுகிறார். இதன் அளவு இரத்தத்தில் அதிகரிப்பதால், சர்க்கரை நோயாக மாறி விடுகிறது.
Advertisment
இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த தவறினால், அவை பெரும் பக்கவிளைவுகளுக்கு வழிவகுக்கும். நரம்பு மண்டல பாதிப்பு, சிறுநீரக கோளாறு, கண் பாதிப்பு போன்ற பிரச்சனைகளை இவை ஏற்படுத்தக் கூடும் என்று மருத்துவர் பன்னீர்செல்வம் கூறுகிறார். இவை இருதய நோய்க்கும் வழிவகுக்கும்.
நம் அன்றாட உணவு வழக்கத்தை சீரமைப்பதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். பாரம்பரிய அரிசிகளில் குதிரைவாலி என்ற வகை அரிசி இருக்கிறது. இந்தக் குதிரைவாலி அரிசியை ஒரு நாளின் மூன்று வேளை உணவிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் பன்னீர்செல்வம் அறிவுறுத்துகிறார்.
அதன்படி, காலை இட்லி, தோசையாகவும், மதிய நேரத்தில் சாப்பாட்டிற்காவும், இரவு நேர உணவிலும் குதிரைவாலி அரிசியை எடுத்துக் கொள்ளலாம். இவற்றுடன் சமமான அளவு காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். இந்த புதிய உணவு முறைக்கு மாறும் போது தொடக்கத்தில் சிரமமாக இருந்தாலும், அதன்பின்னர் சுவை பழகிவிடும் என்று மருத்துவர் பன்னீர்செல்வம் கூறுகிறார்.
Advertisment
Advertisements
சுமார் 10 நாட்களுக்கு குதிரைவாலி அரிசியில் செய்த உணவை தொடர்ந்து சாப்பிடும் போது, இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு கட்டாயமாக குறையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - Mr Ladies Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.