சுகரை 10 நாளில் குறைக்கும்... 3 வேளையும் இந்த அரிசியை யூஸ் பண்ணுங்க: டாக்டர் பன்னீர் செல்வம் டிப்ஸ்

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் உணவு முறை பழக்கத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று மருத்துவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, 10 நாட்களில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம் என்று அவர் கூறுகிறார்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் உணவு முறை பழக்கத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று மருத்துவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, 10 நாட்களில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம் என்று அவர் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
Diabetes diet

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பலரையும் அச்சுறுத்தும் ஒரு பொதுவான நோயாக சர்க்கரை நோய் மாறியுள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இல்லாமல் போவதால் ஏற்படும் இந்த நிலை, ஆரம்பத்தில் சாதாரண பிரச்சனையாகத் தோன்றினாலும். நீண்ட காலத்திற்கு சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டால், பல தீவிர உடல்நலப் பிரச்சனைகளுக்கு இது வழிவகுக்கும்.

Advertisment

சர்க்கரை நோயின் மிக முக்கியமான மற்றும் அபாயகரமான பாதிப்புகளில் ஒன்று இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகும். உயர் இரத்த சர்க்கரை அளவு இரத்த நாளங்களை சேதப்படுத்தி, அவை கடினமாகவும், குறுகலாகவும் மாற காரணமாகிறது. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. அதனடிப்படையில், வீட்டு வைத்திய முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் டிப்ஸ்களை ஹெல்த் கஃபே தமிழ் என்ற யூடியூப் சேனலில் மருத்துவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் உணவு முறை பழக்கத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று மருத்துவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, 10 நாட்களில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம் என்று அவர் கூறுகிறார்.

அதன்படி, சாதாரண வெள்ளை அரிசி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து விட்டு, குதிரைவாலி அரிசியை நாள்தோறும் எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் பன்னீர் செல்வம் பரிந்துரைக்கிறார். அதிலும் காலை மற்றும் இரவு நேரத்தில், குதிரைவாலி அரிசியை டிஃபன் வகைகளாகவும், மதிய நேரத்தில் சாதமாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

இவ்வாறு மூன்று வேளையும் குதிரைவாலி அரிசியை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் 10 நாட்களில் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்க முடியும் என்றும், மருந்துகளின் பயன்பாடுகளையும் குறைக்கலாம் என்று மருத்துவர் பன்னீர் செல்வம் அறிவுறுத்துகிறார்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Diabetes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: