ஈரலை 3 நாளில் சுத்தம் பண்ணலாம்... அதுக்கு காலை வெறும் வயிற்றில் இந்த டிரிங்க் குடிக்கணும்: டாக்டர் பொன். அண்ணாதுரை
கல்லீரலில் இருக்கும் கொழுப்பை எவ்வாறு எளிமையான முறையில் குறைக்கலாம் என்று மருத்துவர் பொன். அண்ணாதுரை தெரிவித்துள்ளார். குறிப்பாக, வீட்டு வைத்திய முறையில் இதனை செய்ய முடியும்.
கல்லீரலில் இருக்கும் கொழுப்பை எவ்வாறு எளிமையான முறையில் குறைக்கலாம் என்று மருத்துவர் பொன். அண்ணாதுரை தெரிவித்துள்ளார். குறிப்பாக, வீட்டு வைத்திய முறையில் இதனை செய்ய முடியும்.
இன்றைய சூழலில் ஃபேட்டி லிவர் பிரச்சனையால் நிறைய பேர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, மது அருந்தும் பழக்கம் இல்லாதவர்களுக்கு கூட இதன் தாக்கம் அதிகப்படியாக இருக்கிறது. இதனால் உடலின் ஆரோக்கியம் கேள்விக் குறியாகி இருக்கிறது.
Advertisment
அதன்படி, வீட்டு வைத்திய முறையில் கல்லீரலில் இருக்கும் கொழுப்பை குறைக்க முடியுமா என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கும். இதற்கான பதிலை மருத்துவர் பொன். அண்ணாதுரை தெரிவித்துள்ளார். வீட்டு வைத்திய முறையில் இதற்கு மருந்து தயாரிக்கலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். இது குறித்த பல்வேறு தகவல்களை ஹெல்த் கஃபே தமிழ் என்ற யூடியூப் சேனலில் அவர் பதிவிட்டுள்ளார்.
மருந்துக்காக பயன்படுத்தும் மஞ்சள் கலப்படம் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம். அதன்படி, கட்டி மஞ்சளாக கடைகளில் இருந்து வாங்கி அவற்றை வெயிலில் உலர்த்திய பின்னர் பொடியாக அரைத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் பொன். அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இப்போது, 250 மில்லி லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சுத்தமான மஞ்சள் மற்றும் கால் ஸ்பூன் கல் உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சுமார் 3 நாட்களுக்கு குடிக்க வேண்டும் என்று மருத்துவர் பொன். அண்ணாதுரை பரிந்துரைக்கிறார்.
Advertisment
Advertisements
இவ்வாறு செய்யும் போது கல்லீரலில் இருக்கும் கொழுப்பு குறையும் என்று அவர் குறிப்பிடுகிறார். மேலும், உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றவும் இது பயன்படுகிறது என்று மருத்துவர் பொன். அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.