சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக இருக்கும் வெந்தயத்தை இரவு ஊறவைத்து காலையி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம் என டாக்டர் பொற்கொடி தனது யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
Advertisment
பண்டைய காலம் முதல் இன்று வரை வெந்தயம் எல்லாவித நோய்களுக்கும் மருந்தாக இருக்கின்றது. முறையான உணவு முறைகளில் கவனம் எடுத்தாலே ஆரோக்கியம் கிடைத்திடும். வெந்தயத்தை உணவாக நாம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய், சிறுநீரக மண்டல தொற்றுக்கள் சீராகும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக இருக்கும் வெந்தயத்தை எப்படி எல்லாம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது மற்றும் அதனை ஊறவைத்து சாப்பிடுவதன் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் வெந்தயம் என்ற அளவில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை முன்னாடி நாள் இரவே ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளலாம். உடலில் குளிர்ச்சி வேண்டும் என நினைப்பவர்கள் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடலாம்.
Advertisment
Advertisements
வெந்தயம் மலச்சிக்கல், உடல் பருமன், மாதவிடாய் கோளாறு, உடல் சூடு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் சூடு நீங்கி குளிர்ச்சியடையும். அதிக வியர்வை, நீரிழப்பு, மஞ்சள் காமாலை, உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவற்றை வெந்தயத்தண்ணீர் தடுக்கிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.