/indian-express-tamil/media/media_files/2025/06/04/X3Fe4Gxlm2PEoMo9ehi4.jpg)
ஒரு வாரத்தில் மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழிப்பது, மலம் கழித்த பின்னும் முழுமையாக வெளியேறாத உணர்வு, கடினமான மற்றும் உலர்ந்த மலத்தை வெளியேற்றுவது போன்றவை மலச்சிக்கல் ஆகும். சில சமயங்களில் இரத்தப்போக்கும் ஏற்படலாம். இது குறித்த மேலும் பல தகவல்களை டாக்டர் ஃபார்மர் என்ற யூடியூப் சேனலில் மருத்துவர் பிரபாகர் ராஜ் தெரிவித்துள்ளார்.
மலச்சிக்கல் ஏற்படுவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இருக்கின்றன. அந்த வகையில், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சரியான அளவில் எடுத்துக் கொள்ளாதது மலச்சிக்கலை ஏற்படுத்தும். மேலும், சரியான உடல் இயக்கம் இல்லாததும், போதுமான தண்ணீர் குடிக்காததும் இதற்கு ஒரு காரணமாக அமையும். மேலும், சில சமயங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் மருந்தும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
இதனை தடுப்பதற்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும், ஒரு நாளைக்கு சுமார் 2.5 லிட்டர் முதல் 3.5 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். நாள்தோறும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் நடைபயிற்சி அல்லது யோகா போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
இயற்கை வைத்திய முறையில் திரிபலா பொடியை 1 சிட்டிகை அளவில் வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவு நேரத்தில் குடித்தால் மலச்சிக்கல் பாதிப்பு குறையும். சிலருக்கு பால் பொருட்களில் ஒவ்வாமை இருக்கும். எனவே, அவர்கள் டீ, காபி உள்ளிட்டவற்றை தவிர்த்து விடலாம் என்று மருத்துவர் பிரபாகர் ராஜ் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.