200 மடங்கு பலன்... உங்க பார்வையை ஷார்ப் ஆக்கும் இந்த உணவுகள்; அடிக்கடி சேருங்க: டாக்டர் ராஜலட்சுமி
நம்முடைய கண் பார்வையை கூர்மையாக்கும் ஆற்றல் கொண்ட உணவு வகைகளின் பட்டியலை மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் விளக்கமாக பார்க்கலாம்.
நம்முடைய கண் பார்வையை கூர்மையாக்கும் ஆற்றல் கொண்ட உணவு வகைகளின் பட்டியலை மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் விளக்கமாக பார்க்கலாம்.
நமது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அவற்றை கூர்மையாக்கும் வகையிலான சில உணவுகளின் பட்டியலை மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்களை காஸ்மோ ஹெல்த் என்ற யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
பச்சை மற்றும் ஊதா நிற கீரைகளில் லுடீன் நிறைந்துள்ளது. இவை கண்களையும், மூளையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. மேலும், வயது முதிர்வு காரணமாக ஏற்படும் கண்புரை போன்ற பிரச்சனைகளைத் தடுக்கின்றன.
கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா-கரோட்டின் உள்ளது. இது வைட்டமின் ஏ-வாக மாறுகிறது. வைட்டமின் ஏ கண் பார்வைக்கு மிகவும் முக்கியமானது. அவரைக்காய் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்து மற்றும் லுடீன் சத்துகள் உள்ளன. இது ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
முட்டையின் மஞ்சள் கருவில் லுடீன் அதிக அளவில் உள்ளது. மேலும், இது காய்கறிகளில் இருந்து கிடைக்கும் லுடீனை விட எளிதில் ஜீரணமாகும். இது 200 மடங்கு கண்களுக்கு நன்மை அளிக்கிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கண் செல்களுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்கின்றன. மேலும், இது கண்புரை அபாயத்தைக் குறைக்கும்.
Advertisment
Advertisements
நெய்யில் இருக்கும் சுத்தமான கொழுப்பு மற்றும் லுடீன், கண்புரை மற்றும் மாகுலர் டிஸ்டிராபி போன்ற கண் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. நட்ஸ் மற்றும் விதைகள் ஆகியவற்றில் வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
வைட்டமின் சி, சருமம் மற்றும் எலும்புகளுக்கு மட்டுமல்ல, பார்வைக்கும் நல்லது. எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி மற்றும் கொலாஜன் இரண்டும் உள்ளன. ஆளி விதைகள், சைவ உணவு உண்பவர்களுக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரம் ஆகும்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி, டானின்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியையும், பார்வையையும் மேம்படுத்துகிறது. மேலும், சித்த மருத்துவத்தின் படி, இது கல்லீரல் செயல்பாட்டையும் சீராக்குகிறது என்று மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.