சுட்டெரிக்கும் வெயிலில் அதிகம் தண்ணி குடிக்க முடியலயா? 2 சொட்டு லெமன் இப்படி சேருங்க: டாக்டர் சாலை ஜெய கல்பனா
அதிகமான வெயிலாக இருந்தாலும் தண்ணீர் நிறைய குடிக்க முடியவில்லை என்று பலரும் கூறுவார்கள் அவர்கள் எல்லாம் உடலை ஹைட்ரேட்டாக வைக்க டாக்டர் சாலை ஜெய கல்பனா டிப்ஸ் ஒன்றை கூறி இருக்கிறார்.
அதிகமான வெயிலாக இருந்தாலும் தண்ணீர் நிறைய குடிக்க முடியவில்லை என்று பலரும் கூறுவார்கள் அவர்கள் எல்லாம் உடலை ஹைட்ரேட்டாக வைக்க டாக்டர் சாலை ஜெய கல்பனா டிப்ஸ் ஒன்றை கூறி இருக்கிறார்.
கோடைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும், சரியான உணவை எடுத்துக் கொள்வதும் மிகவும் முக்கியமாகும். வெயில் காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பார்கள் ஆனால் தண்ணீர் அவ்வளவாக நம்மால் குடிக்க முடியாது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர் சாலை ஜெய கல்பனா மதுஆழி யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் இந்த காலநிலையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது அவசியமாகும். அதிலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே கடும் வெயிலின் தாக்கத்தை பலரும் பல இடங்களில் அனுபவித்து வருகின்றனர். அதனால் உடலை நீரேற்றமாக வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
டிப்ஸ் 1: காலை எழுந்ததும் தண்ணீரில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.
டிப்ஸ் 2: அதேபோல தண்ணீரில் நெல்லிக்காய் நறுக்கி போட்ட அந்த தண்ணீரை குடிக்கலாம்.
Advertisment
Advertisements
டிப்ஸ் 3: நெல்லிக்காய் கிடைக்காத போது நெல்லி வற்றல் சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும் அதனை வாங்கி தண்ணீரில் கலந்து கூட குடிக்கலாம்.
டிப்ஸ் 4: அதேபோல முன்னாடி நாள் இரவு சீரகத்தை ஊற வைத்து சீரக தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்.
டிப்ஸ் 5: குடிக்கும் தண்ணீரில் சியா விதைகளை போட்டு குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.