ஈரல் கொழுப்பை வழித்தெடுக்கும் இந்த ஜூஸ்... வெறும் 4 பொருள் போதும்: டாக்டர் சொல்லும் டிப்ஸ்
இந்த ஜூஸை வாரத்திற்கு இரண்டு முறை குடிப்பதன் மூலம், கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுத்தன்மை இயற்கையாகவே வெளியேறும் என்று மருத்துவர் சந்தோஷிமா கூறுகிறார்.
இந்த ஜூஸை வாரத்திற்கு இரண்டு முறை குடிப்பதன் மூலம், கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுத்தன்மை இயற்கையாகவே வெளியேறும் என்று மருத்துவர் சந்தோஷிமா கூறுகிறார்.
நமது உடலில் கல்லீரலின் பங்கு மிகவும் முக்கியமானது என மருத்துவர் சந்தோஷிமா தெரிவித்துள்ளார். கல்லீரல் ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு தகவல்களை தனது யூடியூப் சேனலில் அவர் பகிர்ந்துள்ளார். கல்லீரலை எவ்வாறு இயற்கையான முறையில் சுத்திகரிப்பது என்பது பற்றிய குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
Advertisment
கல்லீரலை சுத்திகரிப்பு ஏன் அவசியம்?
மருத்துவர் சந்தோஷிமா, கல்லீரலை அடிக்கடி சுத்திகரிப்பது மிகவும் அவசியம் என்று வலியுறுத்துகிறார். நம் உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றுவதில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான கல்லீரல், உடல் செயல்பாடுகளை சீராக வைத்துக்கொள்ள உதவும். கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை இயற்கையாகவே வெளியேற்ற உதவும் ஒரு சிறப்பு ஜூஸை மருத்துவர் சந்தோஷிமா பரிந்துரைக்கிறார்.
இந்த ஜூஸை தயாரிக்கத் தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
ஒரு கைப்பிடி புதினா இலைகள், ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகள், மூன்று பல் பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி, தேவையான அளவு நீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து ஜூஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம்.
இந்த ஜூஸை வாரத்திற்கு இரண்டு முறை குடிப்பதன் மூலம், கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுத்தன்மை இயற்கையாகவே வெளியேறும் என்று மருத்துவர் சந்தோஷிமா கூறுகிறார். இந்த எளிய மற்றும் இயற்கையான முறை மூலம் உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு, உங்கள் ஒட்டுமொத்த உடல் நலத்தையும் மேம்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.