கிட்னி செல்களை பலப்படுத்தும்... இந்த செடியை தண்ணீருடன் கலக்கி குடிங்க: டாக்டர் சதீஷ் குமார்
கிட்னி செல்களை பலப்படுத்தும் உணவு முறை குறித்து மருத்துவர் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இவை நம் ஆரோக்கியத்தில் எவ்வாறு பங்கு வகிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிட்னி செல்களை பலப்படுத்தும் உணவு முறை குறித்து மருத்துவர் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இவை நம் ஆரோக்கியத்தில் எவ்வாறு பங்கு வகிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் விரல்களில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பாதிப்பை எவ்வாறு சீரமைக்கலாம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Advertisment
யூரிக் அமிலத்தின் கழிவுகளை பெரும்பாலும் சிறுநீரகம் வெளியேற்றி விடும். ஆனால், சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாத போது, யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் என்று மருத்துவர் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இவை எலும்புகளில் தேய்மானத்தை ஏற்படுத்துகின்றன. இந்தக் காரணத்தால், விரல் போன்ற பகுதிகளில் வீக்கம் உருவாகிறது. இதனை உணவு முறைகள் மூலம் சீரமைக்கலாம் என்று மருத்துவர் சதீஷ் குமார் அறிவுறுத்துகிறார்.
இந்த பாதிப்பு இருப்பவர்கள் பெரும்பாலும் அசைவ உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும், எளிதாக செரிமானம் ஆகக் கூடிய உணவுகளை மட்டும் தினசரி சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் சதீஷ் குமார் பரிந்துரைக்கிறார்.
Advertisment
Advertisements
சுரைக்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம். அடுத்தபடியாக, சிறுநீரக செல்களை பலப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம் என்று மருத்துவர் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதற்காக சித்த மருத்துவத்தில் யானைநெருஞ்சில் என்ற மூலிகை பயன்படுவதாக மருத்துவர் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து யானைநெருஞ்சில் செடியை கலக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் தண்ணீர் பார்ப்பதற்கு ஜெல் பதத்திற்கு மாறி இருக்கும். இதனை தொடர்ச்சியாக குடிக்கும் போது, சிறுநீரகத்தின் செல்கள் பலப்படும் என்று மருத்துவர் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நன்றி - Health Cafe Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.