சர்க்கரை நோய் வந்துட்டா இனிப்பு சாப்பிட முடியாதேன்னு கவலைப்படாதீங்க. அதற்கு டாக்டர் செல்வா சண்முகம் ஆயுர்வேத மருத்துவத்தின்படி சர்க்கரை நோயை மருந்து இல்லாமலே குணப்படுத்த முடியும் என்று டாக்டர் விகடன் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Advertisment
ஆயுர்வேதத்துல, சர்க்கரை நோயை முழுசா குணப்படுத்த முடியும்னு 2000 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்காங்க. இன்னைக்கு இருக்கிற அறிவியல் ஆராய்ச்சிகளும் இதை நிரூபிச்சிருக்காங்க.
சர்க்கரை நோய் குணமான பிறகு இனிப்பு சாப்பிடலாமான்னு கேட்டா, தாராளமா சாப்பிடலாம். ஆனா வெள்ளை சர்க்கரை, செயற்கை இனிப்புகள் எல்லாம் தவிர்க்கணும். பழங்கள், பனை வெல்லம், தேன் மாதிரி இயற்கையான இனிப்புகளை அளவா எடுத்துக்கலாம்.
செயற்கை இனிப்புகள் சில நேரம் வெள்ளை சர்க்கரையை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பனை வெல்லம், பனை கருப்பட்டி, தேன், கரும்பு வெல்லம் இதெல்லாம் நல்லது. அகத்தியர் குணவாகடத்துல, "கொல்லுகின்ற நீரிழிவை கொல்லும் காண்"னு சொல்லியிருக்காங்க.
Advertisment
Advertisements
அதாவது, சர்க்கரை நோயை முழுசா குணப்படுத்த முடியும்னு உறுதியா சொல்லியிருக்காங்க. சரியான சாப்பாடு, வாழ்க்கை முறையை பின்பற்றினா சர்க்கரை நோயை கண்டிப்பா வெல்லலாம் என்று டாக்டர் செல்வா சண்முகம் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.