முருங்கைக் கீரையில் ஏராளமான நன்மைகள் உள்ளது. சிறிய மரத்தில் விளையக் கூடிய விட்டமின் மாத்திரை என்று முருங்கைக் கீரையை கூறலாம் என சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். அவர் கூறுகையில், கண் ஆரோக்கியத்திற்கு கேரட் நல்லது என்று தெரியும். ஆனால் அதை விட பலமடங்கு சத்து முருங்கைக் கீரையில் உள்ளது. கண் ஆரோக்கியத்திற்கு பயன்படும் என்று நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
Advertisment
கண் ஆரோக்கியத்திற்கு உதவும் பீட்டா கரோட்டின் சத்து முருங்கைக் கீரையில் 80,000 அளவு உள்ளது. இதை கீரையாக மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. பருப்பில் கலந்து சிலர் சாப்பிடுவர் அதுபோல் அடிக்கடி இதை சாப்பிட வேண்டும்.
ரத்த அழுத்ததை சீராக வைக்க முருங்கைக் கீரை பெரிய பங்களிப்பு செய்கிறது. பி.பி-க்கு தினமும் மாத்திரை சாப்பிடுபவர்கள் உணவில் அதிக முக்கியமாக முருங்கைக் கீரை எடுக்கலாம். முருங்கைக் கீரையை தண்ணீரில் கொதிக்க வைத்து சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து காலை உணவோடு சூப்பாக குடிக்கலாம். இதை செய்வது நிறைய பேருக்கு ரத்த அழுத்தம் குறைவாக அறிவியல் பூர்வமாக சொல்லப்படுகிறது என்று மருத்துவர் கூறினார்.
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news