இந்த ஊரின் சராசரி ஆயுள் 103 வயது: மரவள்ளிக் கிழங்கு இவ்ளோ முக்கியமா?
மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நன்மைகள் குறித்து மருத்துவர் சிவராமன் விவரித்துள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். குறிப்பாக, புற்றுநோயை தடுக்கக் கூடிய ஆற்றில் இது இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மரவள்ளிக் கிழங்கு தற்போதைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இதனை வேகவைத்து சாப்பிடும் போது, இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு உயருவது தாமதம் ஆகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
Advertisment
ஜப்பானில் இருக்கக் கூடிய ஒக்கினாவா என்ற தீவில் சராசரி ஆயுட்காலம் 103 வயது என ஒரு ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
அங்கு இருப்பவர்களிடம் இது குறித்து கேட்டறிந்த போது அவர்கள் சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அதன்படி, அங்கு இருப்பவர்கள் அதிகமாக விவசாயம் செய்து தங்கள் உணவுகளை உற்பத்தி செய்கின்றனர்.
மேலும், வயிற்றுக்கு 80 சதவீத உணவு மட்டுமே அவர்கள் சாப்பிடுகின்றனர். குறிப்பாக, கருநீல நிற மரவள்ளிக் கிழங்கை அப்பகுதி மக்கள் அதிகமாக சாப்பிடுகின்றனர் என மருத்துவர் சிவராமன் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisement
அதில் இருந்து கிடைக்கக் கூடிய அந்தோசைனின் என்கிற சத்து புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். இதே சத்து நம் ஊரில் இருக்கும் நாவல் பழம், கத்திரிக்காயிலும் இருக்கிறது என்று சிவராமன் கூறியுள்ளார். எனவே, இது போன்ற உணவு பொருட்களை கண்டறிந்து நாம் சாப்பிட வேண்டும் என சிவராமன் அறிவுறுத்தியுள்ளார்.
மரவள்ளிக் கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துகளும் காணப்படுகின்றன. எனவே, இது போன்ற ஏராளமான சத்துகள் இருக்கும் மரவள்ளிக் கிழங்கு, நம் உணவில் இருப்பதை நாம் உறுதி செய்திட வேண்டும்.