'காலையில் இப்படி சாப்பிட்டா 11.30 மணிக்கு பசிக்கும்; அப்போதான் நல்ல உடம்பு': மருத்துவர் சிவராமன்

டாக்டர் சிவராமன் நல்ல பசி மற்றும் ஆரோகியத்தை மேம்படுத்தும் ஒரு காலை உணவு வகையை பற்றி பரிந்துரைக்கிறார். இதை குடித்துவிட்ட பின் காலை 11.30 மணிக்கு பசித்தாலே உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம் என்கிறார்.

டாக்டர் சிவராமன் நல்ல பசி மற்றும் ஆரோகியத்தை மேம்படுத்தும் ஒரு காலை உணவு வகையை பற்றி பரிந்துரைக்கிறார். இதை குடித்துவிட்ட பின் காலை 11.30 மணிக்கு பசித்தாலே உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம் என்கிறார்.

author-image
WebDesk
New Update
Sivaraman

காலை உணவு என்பது அன்றைய நாளுக்கான அஸ்திவாரம். அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் நம் ஆரோக்கியத்தின் ரகசியம் அடங்கியுள்ளது. இதுகுறித்து  சித்த மருத்துவர் சிவராமன் அவர்கள் ஒரு எளிய ஆனால் சக்தி வாய்ந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். அதிகாலையில் வெறும் வயிற்றில் டீ, காபி குடிக்கும் பழக்கத்திற்கு மாற்றாக, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்கும் ஒரு 'ஸ்மூதி'யை அவர் பரிந்துரைக்கிறார். இதனை எப்படி செய்வது என்று மாம்ஸ் மன்சிஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

இந்த ஸ்மூதியை தயாரிக்க, ஒரு கப் நிறைய மாதுளம்பழம், ஒரு கனிந்த வாழைப்பழம், ஐந்தாறு பாதாம் பருப்புகள், மற்றும் சிறிதளவு காய்ந்த திராட்சை ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றுடன் வேறு எந்தப் பொருளையும் சேர்க்காமல், அனைத்தையும் மிக்ஸியில் போட்டு ஒரு அடி அடித்தால், அருமையான ஸ்மூதி தயார். இதுவே நமது காலை உணவாக இருக்க வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

இந்த ஸ்மூதியை காலையில் எடுத்துக் கொள்வதன் முக்கியத்துவம் என்னவென்றால், இது உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நீண்ட நேரம் பசியைத் தூண்டாமல் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள மாதுளை, வாழைப்பழம், பாதாம், திராட்சை போன்ற பழங்கள் மற்றும் உலர் பழங்கள் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. இவை செரிமான மண்டலத்தை சீராக செயல்பட வைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

"காலையில் இப்படி சாப்பிட்டால் 11.30 மணிக்கு பசிக்கும்; அப்போதான் நல்ல உடம்பு" என்கிறார் மருத்துவர் சிவராமன். ஆம், இந்த ஸ்மூதியை காலை உணவாக உட்கொள்ளும்போது, காலை 11:30 மணி அளவில் மிதமான பசி எடுக்கும். சரியான நேரத்தில் பசி எடுப்பது ஒரு நல்ல செரிமான மண்டலத்தின் அறிகுறி. இது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஒரு முக்கியமான காரணியாகும். அதிக நேரம் பசியில்லாமலோ, அல்லது கட்டுப்பாடற்ற பசியுடனோ இருப்பது உடலுக்கு நல்லதல்ல. 

Advertisment
Advertisements

எனவே, சரியான நேரத்தில் பசி எடுத்து, பின்னர் மதிய உணவை உட்கொள்வது உடலின் சீரான இயக்கத்திற்கு மிகவும் அவசியம். இந்த எளிய மாற்றத்தை நமது காலை உணவு முறையில் கொண்டு வருவதன் மூலம், ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் அடித்தளமிடலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Benefits of bananas as breakfast Best breakfast options for summer

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: