/indian-express-tamil/media/media_files/2025/05/12/5PepimrFkjLLsLZeWIzG.jpg)
பாலூட்டும் தாய்மார்களை பொறுத்தவரை, எந்த விதமான உணவுகள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் என்ற கேள்வி இருக்கும். இந்தக் கேள்விக்கான பதிலை மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். அதனை இந்தப் பதிவில் காணலாம்.
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவு முறைகள் குறித்து பாரம்பரியமாக சொல்லப்பட்டுள்ளது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். அதன்படி, வெள்ளைப் பூண்டை பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று அவர் கூறுகிறார்.
இதேபோல், உருளைக் கிழங்கிற்கும் தாய்ப்பாலை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கிறது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். எனவே, இதனையும் பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
பல்வேறு நோய்களுக்கு மருந்தாக செயல்படும் வெந்தயம், தாய்ப்பாலையும் அதிகப்படுத்துகிறது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இது தவிர அசைவ உணவுகள் சாப்பிடுபவராக இருந்தால், மீன் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க சுறாப்புட்டு பயன்படுகிறது என்று அவர் கூறுகிறார்.
இவை அனைத்தையும் சாப்பிட்ட பின்னரும் கூட தாய்ப்பால் சுரப்பது குறைவாக இருந்தால், சித்த மருத்துவத்தில் சதாவரி கிழங்கை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.
எனவே, இந்தக் கிழங்கின் பொடியை அரை ஸ்பூன் அளவிற்கு பாலில் கலந்து சாப்பிடலாம் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்த உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தலாம்.
நன்றி - Healthy Tamilnadu Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.